|
|
|
துலகியல்
கூறிப் பொருளிது வென்ற
வள்ளுவன் றனக்கு வளர்கவிப் புலவர்முன்
முதற்கவி பாடிய முக்கட் பெருமான்
மாதுடன் றோன்றிக் கூடலு ணிறைந்தோன் |
|
25
|
|
தன்னைநின் றுணர்ந்து தாமுமொன் றின்றி
யடங்கினார் போல நியும்
ஒடுங்கிநின் றமைதி யிந்நிலை யறிந்தே. |
(உரை)
கைகோள்: களவு. தோழிக்கூற்று
துறை: நிலவு
வெளிப்பட வருந்தல்.
(இ-ள்) இதற்கு நாற்றமும்
தோற்றமும் (தொல். களவி. 23) என்னும் நூற்பாவின்கண் புணர்ச்சி வேண்டினும் எனவரும்
விதிகொள்க.
11-12:
கொலை....................................தடிந்தும்
(இ-ள்) கொலைநுதி
எயிறு என்று-கொலைத்தொழிலினையும் கூர்மையுமுடைய மருப்பு என்று பெயர் கூறப்பட்டு; இருபிறை
முளைத்த புகர்முகம்-வாயின்கண் இரண்டு பிறைகள் தோன்றப்பெற்ற புள்ளிகளையுடைய முகத்தினையுடைய
யானை தன்னைவந்து எதிர்த்த நாளிலே; ஒருவிசை புழை கை தடித்தும்-ஒருமுறை அந்த யானையின்
துளையையுடைய கையை வெட்டியும் என்க.
(வி-ம்.) இது களிதரு
புணர்ச்சி கூறுகின்றது. தலைவியை ஒரு யானை துரத்திவந்தபொழுது அதன் கையை வெட்டி வீழ்த்தித்
தலைவன் அவளை உய்யக் கொண்டான் என்பது கருத்து. புகர்முகம்-யானை: அன்மொழித்தொகை.
புழை-துளை. ஒருவிசை-ஒருமுறை. தடிதல்- வெட்டுதல்.
13-14:
மதுவிதழ்,.....................................அளித்தும்
(இ-ள்) மது இதழ்க்
குவளை என்று அடுகண் மலர்ந்த நெடுஞ்சுனை புதைய-எம்பெருமாட்டி ஒருநாள் தேனையும் இதழ்களையுமுடைய
குவளை மலர்கள் என்று பெயர் கூறப்பட்டுக் கொல்லுகின்ற கண்களை மலர்ந்த நெடிய சுனையிடத்தில்
நீராடுங்கால் முழுகாநிற்ப; புகுந்து எடுத்து அளித்தும்-அச்சுனை நீரினூடு புகுந்து அவளை எடுத்துக்
கரையேற்றி உய்யக் கொண்டும் என்க.
|