பக்கம் எண் :

மூலமும் உரையும்115



  துலகியல் கூறிப் பொருளிது வென்ற
வள்ளுவன் றனக்கு வளர்கவிப் புலவர்முன்
முதற்கவி பாடிய முக்கட் பெருமான்
மாதுடன் றோன்றிக் கூடலு ணிறைந்தோன்
25
  தன்னைநின் றுணர்ந்து தாமுமொன் றின்றி
யடங்கினார் போல நியும்
ஒடுங்கிநின் றமைதி யிந்நிலை யறிந்தே.

(உரை)
கைகோள்: களவு. தோழிக்கூற்று

துறை: நிலவு வெளிப்பட வருந்தல்.

     (இ-ள்) இதற்கு ‘நாற்றமும் தோற்றமும்’ (தொல். களவி. 23) என்னும் நூற்பாவின்கண் ‘புணர்ச்சி வேண்டினும்’ எனவரும் விதிகொள்க.

11-12: கொலை....................................தடிந்தும்

     (இ-ள்) கொலைநுதி எயிறு என்று-கொலைத்தொழிலினையும் கூர்மையுமுடைய மருப்பு என்று பெயர் கூறப்பட்டு; இருபிறை முளைத்த புகர்முகம்-வாயின்கண் இரண்டு பிறைகள் தோன்றப்பெற்ற புள்ளிகளையுடைய முகத்தினையுடைய யானை தன்னைவந்து எதிர்த்த நாளிலே; ஒருவிசை புழை கை தடித்தும்-ஒருமுறை அந்த யானையின் துளையையுடைய கையை வெட்டியும் என்க.

     (வி-ம்.) இது களிதரு புணர்ச்சி கூறுகின்றது. தலைவியை ஒரு யானை துரத்திவந்தபொழுது அதன் கையை வெட்டி வீழ்த்தித் தலைவன் அவளை உய்யக் கொண்டான் என்பது கருத்து. புகர்முகம்-யானை: அன்மொழித்தொகை. புழை-துளை. ஒருவிசை-ஒருமுறை. தடிதல்- வெட்டுதல்.

13-14: மதுவிதழ்,.....................................அளித்தும்

     (இ-ள்) மது இதழ்க் குவளை என்று அடுகண் மலர்ந்த நெடுஞ்சுனை புதைய-எம்பெருமாட்டி ஒருநாள் தேனையும் இதழ்களையுமுடைய குவளை மலர்கள் என்று பெயர் கூறப்பட்டுக் கொல்லுகின்ற கண்களை மலர்ந்த நெடிய சுனையிடத்தில் நீராடுங்கால் முழுகாநிற்ப; புகுந்து எடுத்து அளித்தும்-அச்சுனை நீரினூடு புகுந்து அவளை எடுத்துக் கரையேற்றி உய்யக் கொண்டும் என்க.