|
30
|
|
லிரண்டைஞ்
ஞாறு திரண்டமுக மெடுத்து
மட்புல னகழ்ந்து திக்குநிலை மயக்கிப்
புரியாக் கதமோ டொருபா லடங்குங் |
|
35
|
|
கங்கையிற்
படிந்த பொங்கு தவத்தானு
மந்நெடு வேணியிற் கண்ணியென விருந்து
தூற்றுமறு வொழிந்த வேற்றத் தானு
மணிவான் பெற்றவிப் பிறையைப்
பணிவாய் பிரிந்து தாமரை மகளே. |
(உரை)
கைகோள்: களவு. தோழை கூற்று
துறை: பிறைதொழுகென்றல்.
(இ-ம்.) நாற்றமும்
தோற்றமும் (தொல். கள. 23) என்னும் நூற்பாவின்கண், மெய்யினும் பொய்யினும்
வழிநிலை பிழையாது பல்வேறு கவர்பொருள் நாட்டத் தானும் எனவரும் விதி கொள்க.
35:
தாமரைமகளே.........................
(இ-ள்) தாமரைமகளே-செந்தாமரை
மலரில் வீற்றிருக்கும் திருமகள் போல்வாய்! என்க.
(வி-ம்.) இனி மங்கலமாய்ப்
போழ்தின் முகமலர்ச்சியுடைத்தாய் எல்லோரானும் நன்கு மதிக்கப்படும் தன்மையும் உடைத்தாய்,
விளங்கும் தாமரை மலரை ஒத்த மகளே எனினுமாம்.
1-4:
நெடுவளி.........................கோடானும்
(இ-ள்) எழுமலை விழுமலை
புடைமணிஆக-இப்பிறையானது எழுமலையும் விழுமலையும் ஆகிய இரண்டு மலைகளும் இரண்டு பக்கங்களினும்
கட்டும் மணிகளாக; நெடுவளி உயிர்த்து மழைமதம் ஒழுக்கி-நீண்ட காற்றாகிய மூச்சினை
உதிர்த்து மழையாகிய மதத்தினைச் சிந்தி; மீன்புகர் நிறைந்த-விண்மீன்களாகிய புள்ளிகள்
நிறைந்த; வான் குஞ்சரமும் வால்பெற முளைத்த-வானமாகிய யானையினது முகத்தில் தூய்மையுண்டாகத்
தோன்றிய; கூன் கோடு ஆனும்-வளைந்த மருப்பேயோயினும் என்க.
(வி-ம்.) எழுமலை-கோள்கள்
தோன்றுடற்கிடனான மலை; (உதயகிரி) விழுமலை-அவை மறைதற்கிடனான மலை; (அத்தமனகிரி).
மலைகளாகிய மணிகளையும் நெடுவளியாகிய மூச்சினையும் மழையாகிய மத நீரினையும் மீனாகிய
நெற்றிப் புள்ளிகலையும் உடைய வானமாகிய யானை முகத்திலே தோன்றிய வளைந்த மருப்பாயினும்
என்க. கூன்-
|