பக்கம் எண் :

மூலமும் உரையும்167



வளைவு, கோடானும்-கோடு ஆயினும். ஆயினுமென்பது ஆனுமெனக் குறைத்து நின்றது. “ஒன்றானுந் தீச்சொல்” (குறள்-128) என்றாற்போல, இது மேல் வருவனவற்றிற்கும் ஒக்கும்.

5-6: பேச.....................தோணியதானும்

     (இ-ள்) பேச நீண்ட பல்மீன் நிலைஇய வானக்கடலில்-இன்னும் இப்பிறை சொல்லத்தொலையாத பலவாகிய மீன்கள் நிலைபெற்ற வானமாகிய கடலின்கண் இயங்குமொரு; தோணியது ஆனும்-தோணியே யாயினும் என்க.

     (வி-ம்.) வானக்கடலில் தோணி என்பது ஏமப்புணையைச் சுடும் என்றாற்போல ஏகதேச உருவகம். எனவே இருளாகிய பாசியை நீத்து உலகத்தை விளக்கமாகிய கரையில் ஏற்றும் தோணிஎன்றுங் கூறிக் கொள்க. பன்மீன் இரண்டிற்கும் சிலேடை. தோணி-மரக்கலம்.

7-8: கொழுநர்......................நாவாயானும்

     (இ-ள்) கொழுநர் கூடும் காம உததியைவிட-தலைவிமார் தங்கணவரொடு கூடுதற்குக் காரணமாகிய காமக் கடலின் நீங்க; கரை உகையும் நாவாயானும்-இன்பமாகிய கரையிற் செலுத்தும் படகேயாயினும் என்க.

     (வி-ம்.) கொழுநர்-கணவர். காமவுததி-காமமாகிய கடல். உகையும்-செலுத்தும். நாவாய்-ஒருவகை மரக்கலம்.

9-11: கள்ளமர்.....................வில்லானும்

     (இ-ள்) ஐங்கணைக் கிழவன் கள்அமர் கோதையர் வெள்ளணி விழவில்-இன்னும் அப்பிறை ஐந்து மலரம்புகளையுடைய காமவேள் தேன் பொருந்திய மலர்மாலையினையுடைய மகளிருடைய பிறந்தநாள் விழாவின்கண்; உள்மகிழ இழைத்து வளைத்த-அவர்தம் உள்ளத்தினுள்ளே மகிழும்படி செய்து வளைத்த; கருப்பு வில் காட்சியானும்-கரும்பு வில்லைப்போலக் காணப்படுவதொன்றாயினும் என்க.

     (வி-ம்.) ஐங்கணைக் கிழவன்-முல்லை, அசோகு, தாமரை, மாமலர், கருங்குவளை என்னும் ஐந்து மலரம்புகளையுமுடைய காமவேள். கள்-தேங் வெள்ளணி விழவு-பிறந்தநாள் விழா. “கரும்பகடும் செம்பொன்னும் வெள்ளணி நாட்பெற்றார்” எனவரும் வெண்பா மாலையினும் அஃதப்பொருட்டாதல் உணர்க. காணப்படுவதனைக் காட்சி என்றார்.

12-14: நெடியோன்.........................உரிமையானும்

     (இ-ள்) நெடியோன் முதலாம் தேவர்கூடி-இன்னும் அப்பிறைத்தானும் திருமால் முதலிய தேவர்களெல்லாம் ஒருங்கு