|
கூடி; வாங்கிக் கடைந்த
தேம்படி கடலின்-வலித்துக் கடைந்த இனிமையுடைய திருப்பாற் கடலில்; அமுதுடன் தோன்றிய
உரிமையானும்-அமிழ்தத்தோடே பிறந்த உரிமை உடைமையானும் என்க.
(வி-ம்.) நெடியோன்-திருமால்.
தே-இனிமை. தேம்படு-கடல் என்றது திருப்பாற் கடலினை. இனி, தேம்-பாலுக்கு ஆகுபெயர்
எனினுமாம்.
15-16:
நின்..............................பீடதுவானும்
(இ-ள்) நின் திரு
நுதல் ஒளியை-அப்பிறை உன்னுடைய அழகிய நெற்றியின் ஒளியை; ஆடி நிழல்-கண்ணாடி நிழலைத்
தன்னிடத்திற் காட்டினாற்போல; விசும்பு உடலில் காட்டிய பீடதுவானும்-விசும்பு தன்னிடத்தில்
காட்டிய பெருமையை உடையதாதலாலும் என்க.
(வி-ம்.) இஃது எடுத்துக்
காட்டுவமை. பீடது என்புழி அதுவென்பது பகுதிப்பொருள் விகுதி. நுதலொளியை எனற்பாலது
நுதலையொளியென எழுத்து நிலைமாறிற்று.
17-18:
கரை.....................புகழானும்
(இ-ள்) கரை அற அணியும்
மானக் கலனுள்-எல்லையின்றி அணிகின்ற பெருந்தன்மையுடைய அணிகலன்களுள் வைத்து; தலைபெற
இருந்த நிலை புகழாலும்-நின்னுடைய தலைக்கு அணியும்படி பிறை என்னும் ஓரணிகலனாகும் நிலைத்த
புகழுடமையானும் என்க.
(வி-ம்.) பிறை என்பது
மகளிர் தலையணிகலன்களுள் ஒன்றாதல் பற்றி இங்ஙனம் கூறினாள். பிறை அணிகலன் என்பதனை
14ஆம் செய்யுளில் தண்ணம் பிறையும் தலைபெற நிறுத்துக என்பதனானும் உணர்க. மானம்,
கொண்டாட்டமுமாம். நிலைபுகழ்-நிலைத்த புகழ்.
19-20:
மண்..........................ஈகுதலானும்
(இ-ள்) மண் அகம்
அனைத்தும் நிறைந்த பல் உயிர்கட்கு-நில உலகம் அனைத்தும் நிறைந்துள்ள பலவாகிய உயிரினங்களுக்கு;
ஆயா அமுதம் ஈகுதலானும்-ஆராய்ந்து அமிழ்தத்தை வழங்குதலாலும் என்க.
(வி-ம்.) மண்ணகம்-நிலஉலகம்.
ஆயா-ஆய்ந்து
21-24:
பாற்கடல்.........................கடவுள்
(இ-ள்) பால் கடல்
உறங்கும் மாய்வன் போல-திருப்பாற்கடலிலே துயிலுகின்ற திருமால் கிடன்ம்தாற்போல;
தவல மாடத்து அகல் முதுகுபற்றி-வெள்ளிய மேனிலைமாடத்தின்
|