|
(இ-ள்) அந்நெடு வேணியில்
கண்ணி என இருந்து-அக்கங்கை ஒருபாலருடைய சிறப்புடைய நீண்ட அச்சடையின்கண் சூடும் பூவாக
இருந்து; தூற்றம் மறு ஒழிந்த ஏற்றத்தானும்-உலகத்தோர் பழிதூற்றுவதற்குக் காரனமான
களங்கம் ஒழிந்ததனால் வந்த உயர்வினாலும் என்க.
(வி-ம்.) சடையில்
கங்கை ஒருபால் அடங்கும் என்றமையால் அத்தகைய சிறப்புடைய வேணி என்பாள் அந்நெடுவேணி
எனச் சுட்டினாள். கண்ணி-தலையிற் சுடும் மலர்மாலை. பிறையும் மாலைபோலத் தலையிற்
சூடப்படுதலின் கண்ணியென இருந்து என்றாள். மறுஒழிந்தமைக்கு வேணியில் இருந்தது குறிப்பேதுவாயிற்று.
ஏற்றம்-உயர்வு.
34-35:
அணி..........................புரிந்து
(இ-ள்) அணிவான்
பெற்ற இப்பிறையைப் புரிந்து பணிவாய்-அழகிய வானம் ஈன்றருளிய இந்தப் பிறையை நீயும்
விரும்பித் தொழுவாயாக! என்க.
(வி-ம்.) அணி வான்-அழகிய
வானம். புரிந்து-விரும்பி. இனி, தாமரைமகளே! இப்பிறையானது கோடாயினும் தோணியாயினும்,
நாவாவாயினும், விற்போலக் காணப்படுவதாயினும் இது உரிமையினாலும் பெருமையினாலும் புகழப்படுதலாலும்
ஈகுதலாலும் தவத்தாலும் ஏற்றமுடைமையானும் நம்மாற் பணியத்தகும், ந்யும் விரும்பிப்
பணிவாயாக என வினைமுடிவு செய்க. மெய்ப்பாடும் பயனும் அவை.
|