பக்கம் எண் :

மூலமும் உரையும்173



30
  தனிநெடு விசும்பு திருவுட லாக
விருந்திசைப் போக்குப் பெருந்தோ ளாக
வழுவறு திருமறை யோசைக ளனைத்து
மொழிதர நிகழும் வார்த்தை யாக
வுண்ணிறைந் துழலும் பாடிரண் டுயிர்ப்புப்
35
  பகலிர வொடுங்கா விடுவளி யாக
வடுபடைப் பூமியன் கடுமுரண் பற்றி
யிட்டவெங் கொடுஞ்சிறைப் பட்ட கார்க்குலந்
தளளையொடு நிறைநீர் விடுவண போலப்
புரசையொடு பாச மறவுட னிமிர்ந்து
40
  கூடமுங் கந்துஞ் சேறுநின் றலைப்ப
மூன்றுமத நெடும்புனல் கான்றுமய லுவட்டி
யேழுயர் கரித்திரள் கதமொடு பிளிறும்
பெருநகர்க் கூட லுறைதரு கடவுளை
நிறையப் பேசாக் குறையினர் போலவுங்
45
  கல்லா மனனினுஞ் ச்வெலுத்தி பெரும
விளமையு மின்பமும் வளனுங் காட்சியும்
பின்புற நேடின முன்பவை யன்றி
நுனித்த மேனித் திருவினட் கிடைத்த
வினைதரு மடைவி னல்லது
  புனையக் காணேன் சொல்லா யினவே.

(உரை)
கைகோள், கற்பு. தோழிகூற்று

துறை: ஆற்றாமை கூறல்.

     (இ-ம்.) இதற்கு “பெறற்கரும் பெரும் பொருள்” சொல் பொருள் (தொல். கற்பி. 9) எனவரும் நூற்பாவின்கண், “புரியுங்காலை எதிர் நின்று சாற்றிய மரபுடை எதிரும்’ எனவரும் விதி கொள்க.

1-3: பொருப்பு..................அன்றி

     (இ-ள்) பொருப்புமலி தோளினும்-மலையினுட் காட்டில் உயர்ச்சியால் உயர்ந்த தோளின்கண்ணும்; நெருப்பு உமிழ் வேலினும்-தீயை உமிழ்கின்ற வேலின்கண்ணும்; வற்றாக் காதலின்-குறையாத காதலாலே; செந்திருமகளை செயம் கொள் மங்கையை-சிவந்த திருமேனியையுடைய திருமகளையும் வெற்றி