பக்கம் எண் :

196கல்லாடம்[செய்யுள்22]



30
  றுண்டா விளக்கி னீண்டவ ளுதவ
மவ்வழி யுறவு மெய்பெறக் கலந்தின்
றொருகட லிரண்டு திருப்பயந் தாங்கு
35
  வளைத்த நெடுங்கார்ப் புனத்திரு வீரு
மணிநிறை யூச லணிபெற வுகைத்துங்
கருந்தாற் கவைடைச் செம்மணி வைத்துப்
பெருந்தே னிறாலொடு குறிவிழ வெறிந்தும்
வெண்டுகி னுடங்கிப் பொன்கொழித் திழியு
40
  மருவி யேற்று முழைமாஇ கூஉயும்
பெருஞ்சுனை விழித்த நீலங் கொய்துங்
கொடுமரம் பற்றி நெட்டிதண் பொலிந்து
தினைக்கு லறையுங் கிளிக்கணங் கடிதிர்
வெள்ளி யிரும்பு பொன்னெனெப் பெற்ற
45
  மூன்றுபுரம் வேவத் திருநகை விளையாட்
டொருநாட் கண்ட பெருமா னிறைவன்
மாதுட னொன்றி மெய்மனம் புகுந்து
பேணா வுள்ளங் காணாது நடந்து
கொலைகள வென்னும் பழமரம் பிடுங்கிப்
50
  பவச்சுவ ரிடித்துப் புதுக்கக் கட்டி
அன்பொடு வேய்ந்த நெஞ்சமண் டபத்து
பாங்குடன் கானத் தோன்றியுண் ணின்று
பன்மலர்ச் சோலை விம்மிய மெருமல
ரிமையோர் புரத்தை நிறைமணங் காட்டுங்
55
  கூடலம் பதியகம் வீடுபெற விருந்தோ
னிருதாள் பெற்றவர் பொருந்திருப் போல
மருவிய பண்ணை யின்பமொடு விளைநலஞ்
சொல்லுட னமரா தீங்கு
வில்லுடன் பகைத்த செந்துரு நுதலே.

(உரை)
கைகோள்: களவு. தோழி கூற்று.

துறை: வேறுபடுத்துக் கூறல்

     (இ-ம்.) இதற்கு, “நாற்றமும் தோற்றமும்” (தொல். களவு 23) எனவரும் நூற்பாவின்கண் ‘மெய்யினும் பொய்யினும் வழிநிலை பிழையாது பல்வேறு கவர் பொருள் நாட்டத்தானும், எனவரும் விதி கொள்க