|
30
|
|
றுண்டா
விளக்கி னீண்டவ ளுதவ
மவ்வழி யுறவு மெய்பெறக் கலந்தின்
றொருகட லிரண்டு திருப்பயந் தாங்கு |
|
35
|
|
வளைத்த
நெடுங்கார்ப் புனத்திரு வீரு
மணிநிறை யூச லணிபெற வுகைத்துங்
கருந்தாற் கவைடைச் செம்மணி வைத்துப்
பெருந்தே னிறாலொடு குறிவிழ வெறிந்தும்
வெண்டுகி னுடங்கிப் பொன்கொழித் திழியு |
|
40
|
|
மருவி
யேற்று முழைமாஇ கூஉயும்
பெருஞ்சுனை விழித்த நீலங் கொய்துங்
கொடுமரம் பற்றி நெட்டிதண் பொலிந்து
தினைக்கு லறையுங் கிளிக்கணங் கடிதிர்
வெள்ளி யிரும்பு பொன்னெனெப் பெற்ற |
|
45
|
|
மூன்றுபுரம்
வேவத் திருநகை விளையாட்
டொருநாட் கண்ட பெருமா னிறைவன்
மாதுட னொன்றி மெய்மனம் புகுந்து
பேணா வுள்ளங் காணாது நடந்து
கொலைகள வென்னும் பழமரம் பிடுங்கிப் |
|
50
|
|
பவச்சுவ
ரிடித்துப் புதுக்கக் கட்டி
அன்பொடு வேய்ந்த நெஞ்சமண் டபத்து
பாங்குடன் கானத் தோன்றியுண் ணின்று
பன்மலர்ச் சோலை விம்மிய மெருமல
ரிமையோர் புரத்தை நிறைமணங் காட்டுங் |
|
55
|
|
கூடலம்
பதியகம் வீடுபெற விருந்தோ
னிருதாள் பெற்றவர் பொருந்திருப் போல
மருவிய பண்ணை யின்பமொடு விளைநலஞ்
சொல்லுட னமரா தீங்கு
வில்லுடன் பகைத்த செந்துரு நுதலே. |
(உரை)
கைகோள்: களவு. தோழி கூற்று.
துறை: வேறுபடுத்துக்
கூறல்
(இ-ம்.) இதற்கு, நாற்றமும்
தோற்றமும் (தொல். களவு 23) எனவரும் நூற்பாவின்கண் மெய்யினும் பொய்யினும் வழிநிலை
பிழையாது பல்வேறு கவர் பொருள் நாட்டத்தானும், எனவரும் விதி கொள்க
|