|
55: வில்..............................நுதலே
(இ-ள்) வில்லுடன்
பகைத்த செந்துரு நுதலே-வில்லுடனே மாறுபட்ட திலதத்தால் சிவந்த அழகிய நெற்றியினையுடையோய்!
என்க.
(வி-ம்.) இனி, செந்துரு
நுதல் என்பதற்குப் புதுமைஆகிய அழகிய நுதலினை யுடையோய் எனினுமாம். இனி வில்லுடன்
பகைத்த நுதல் செந்துருவே என மாறி நுதலினுடைய சிவந்த திருமகளைப் போல்வாய் எனினுமாம்.
5-6:
என்னுடைய...........................ஒருத்தி
(இ-ள்) என்னுடைய
காண்ணும் உயிரும் ஆகி-எனக்குக் கண்ணும் உயிரும் போல்பவளாகி; உள்நிகழ் இன்பம்
உள்ளாள் ஒருத்தி-என் உள்ளத்தே நிகழும் இன்பத்தையும் தன்னின்பமாகக் கொண்டாள்
ஒரு நங்கை என்க.
(வி-ம்.) தான் விரும்பும்
பொருள்கள் எல்லாவற்றிலும் சிறந்தமையால் அவற்றையே உவமை எடுத்து என் கண்ணும் உயிரும்
ஆகி என்றாள். எனவே அவளை யின்றி எனக்குக் காட்சியும் உயிரும் வேறு இல்லை என்றாளாயிற்று.
என்னின்பமே அவளின்பம் என்றமையால்தான் அவள் என்னும் வேற்றுமை யின்மை கூறினாள்.
7-10:
மலை.....................................அணியாகி
(இ-ள்) மலை குஞ்சரத்தின்
கடக்குழியாகி-இதோ தோன்றும் மலையாகிய யானைக்கு அருவியாகிய அதன் மதநீர் வீழ்ந்தும்
நிரம்பும் குழியும் ஆகி; நெடுமலை விழித்த கண்ணே ஆகி-இன்னும் நெடிய மலையாகிய இத்தேவன்
விழித்துப் பார்த்த கண்னும் ஆகி; அம்மலை திருநுதற்கு அழியாது அமைத்த-இன்னும் அந்த
மலையாகிய மகளுடைய நெற்றியின்கண் ஒருகாலமும் அழியாது இட்ட; வெள்ளை கொள், நல்
அணி சிந்துரம் ஆகி-வெண்ணிறங் கொண்ட நல்ல அழகினையுடைய பொட்டும் ஆகி என்க.
(வி-ம்.) மலைக் குஞ்சரம்;
பண்புத் தொகை. குஞ்சரம் யானை. விழித்தகண் என்பதற்கேற்ப மலையாகிய தேவன் என்க.
திரு: ஆகுபெயர். ஈண்டு உவமை குறியாது நங்கை என்னும் பெயர் மாத்திரையாய் நின்றது.
சிந்தூரம்-திலகம்; பொட்டு. நுதற்கு: உருபுமயக்கம்.
11-15:
தூர..............................இறாலாய்
(இ-ள்) தூரம் நடந்ததாள்
எய்ப்பு ஆறி-நெடுந்தொலைவினின்றும் நடந்து வந்ததானாலுண்டான கால்களின் இளைப்பு ஆறப்
பெற்று; அமுதொடு கிடக்கும் பக்கம் நிறைமதி ஒருபால்-
|