பக்கம் எண் :

மூலமும் உரையும்197



55: வில்..............................நுதலே

     (இ-ள்) வில்லுடன் பகைத்த செந்துரு நுதலே-வில்லுடனே மாறுபட்ட திலதத்தால் சிவந்த அழகிய நெற்றியினையுடையோய்! என்க.

     (வி-ம்.) இனி, செந்துரு நுதல் என்பதற்குப் புதுமைஆகிய அழகிய நுதலினை யுடையோய் எனினுமாம். இனி வில்லுடன் பகைத்த நுதல் செந்துருவே என மாறி நுதலினுடைய சிவந்த திருமகளைப் போல்வாய் எனினுமாம்.

5-6: என்னுடைய...........................ஒருத்தி

     (இ-ள்) என்னுடைய காண்ணும் உயிரும் ஆகி-எனக்குக் கண்ணும் உயிரும் போல்பவளாகி; உள்நிகழ் இன்பம் உள்ளாள் ஒருத்தி-என் உள்ளத்தே நிகழும் இன்பத்தையும் தன்னின்பமாகக் கொண்டாள் ஒரு நங்கை என்க.

     (வி-ம்.) தான் விரும்பும் பொருள்கள் எல்லாவற்றிலும் சிறந்தமையால் அவற்றையே உவமை எடுத்து என் கண்ணும் உயிரும் ஆகி என்றாள். எனவே அவளை யின்றி எனக்குக் காட்சியும் உயிரும் வேறு இல்லை என்றாளாயிற்று. என்னின்பமே அவளின்பம் என்றமையால்தான் அவள் என்னும் வேற்றுமை யின்மை கூறினாள்.

7-10: மலை.....................................அணியாகி

     (இ-ள்) மலை குஞ்சரத்தின் கடக்குழியாகி-இதோ தோன்றும் மலையாகிய யானைக்கு அருவியாகிய அதன் மதநீர் வீழ்ந்தும் நிரம்பும் குழியும் ஆகி; நெடுமலை விழித்த கண்ணே ஆகி-இன்னும் நெடிய மலையாகிய இத்தேவன் விழித்துப் பார்த்த கண்னும் ஆகி; அம்மலை திருநுதற்கு அழியாது அமைத்த-இன்னும் அந்த மலையாகிய மகளுடைய நெற்றியின்கண் ஒருகாலமும் அழியாது இட்ட; வெள்ளை கொள், நல் அணி சிந்துரம் ஆகி-வெண்ணிறங் கொண்ட நல்ல அழகினையுடைய பொட்டும் ஆகி என்க.

     (வி-ம்.) மலைக் குஞ்சரம்; பண்புத் தொகை. குஞ்சரம் யானை. விழித்தகண் என்பதற்கேற்ப மலையாகிய தேவன் என்க. திரு: ஆகுபெயர். ஈண்டு உவமை குறியாது நங்கை என்னும் பெயர் மாத்திரையாய் நின்றது. சிந்தூரம்-திலகம்; பொட்டு. நுதற்கு: உருபுமயக்கம்.

11-15: தூர..............................இறாலாய்

     (இ-ள்) தூரம் நடந்ததாள் எய்ப்பு ஆறி-நெடுந்தொலைவினின்றும் நடந்து வந்ததானாலுண்டான கால்களின் இளைப்பு ஆறப் பெற்று; அமுதொடு கிடக்கும் பக்கம் நிறைமதி ஒருபால்-