அவாவில்லார்க்
கில்லாகுந் துன்பமஃதுண்டேற்
றவாஅது மேன்மேல் வரும்
|
(திருக்.
398) |
எனவும் வரும் அருமைத்
திருக்குறளையும் நோக்குக. தள்ளாக் காமம்-விலக்குதற்கியலாத காமம். மன முதலிய கருவிகள்
உயிர்களின் வினைக்கீடாக அவற்றைத் தம்வயப் படுத்திக்கொண்டு முதல்வனது ஆணைவழி
இயங்குதலால் காமம் உயிர் முயற்சியால் தள்ளுதற்கியலாததாயிற் றென்க. தன்படுதுயரம்-தன்னால்
உண்டாகுந் துன்பங்கள். இவற்றை ஆதித்யாமிகம் என்பர் வடநூலார். அடைவு-முறைமை. தென்புலக்
கோமகன்-கூற்றுவங் துறக்கமும் பொன்விலங்கு போறலின் துறக்கத்து உழல்வரு பீழை என்றார்.
இம்பர்-இப்பிறப்பு. மீளாக்காட்சி-பிறப்பின்கண் மீளாமைக்குக் காரணமான் மெய்க்காட்சி
என்க.
கற்றீண்டு
மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி
|
(திருக். 356) |
எனவும்,
ஓர்த்துள்ள
முள்ள துணரி னொருதலையாய்ப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு |
(திருக். 357) |
எனவும் வரும் திருக்குறளையும்
நினைக.
வேலோய்!
பொலிந்தோய்! அமைந்தோய்! மதியோய்! புணர்ந்தோய்! மலையோய்! வைத்தோய்!
விடுத்தோய்! விரித்தோய்! பொலிந்தோய்! புலவனும் நீயே யாதலின் நின்கால் சென்னிதலைக்
கொள்ளுதும்; அஃதெற்றுக்கெனின் எம்மொழிகொண்டு எம் அருத்தியும் பீழையும் காமமும்
துயரமும் இறத்தலும் தண்டமும் பீழையும் இம்பரின் முடித்து இன்று மீளாக்காட்சி தருதி
எனவே; என்று வினை முடிவு செய்க.
கடவுள்
வாழ்த்து முற்றிற்று.
|