பக்கம் எண் :

22கல்லாடம்[கடவுள்வாழ்த்து]



“அவாவில்லார்க் கில்லாகுந் துன்பமஃதுண்டேற்
 றவாஅது மேன்மேல் வரும்”
(திருக். 398)

எனவும் வரும் அருமைத் திருக்குறளையும் நோக்குக. தள்ளாக் காமம்-விலக்குதற்கியலாத காமம். மன முதலிய கருவிகள் உயிர்களின் வினைக்கீடாக அவற்றைத் தம்வயப் படுத்திக்கொண்டு முதல்வனது ஆணைவழி இயங்குதலால் காமம் உயிர் முயற்சியால் தள்ளுதற்கியலாததாயிற் றென்க. தன்படுதுயரம்-தன்னால் உண்டாகுந் துன்பங்கள். இவற்றை ஆதித்யாமிகம் என்பர் வடநூலார். அடைவு-முறைமை. தென்புலக் கோமகன்-கூற்றுவங் துறக்கமும் பொன்விலங்கு போறலின் துறக்கத்து உழல்வரு பீழை என்றார். இம்பர்-இப்பிறப்பு. மீளாக்காட்சி-பிறப்பின்கண் மீளாமைக்குக் காரணமான் மெய்க்காட்சி என்க.

“கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
 மற்றீண்டு வாரா நெறி”
(திருக். 356)

எனவும்,

“ஓர்த்துள்ள முள்ள துணரி னொருதலையாய்ப்
 பேர்த்துள்ள வேண்டா பிறப்பு”
(திருக். 357)

எனவும் வரும் திருக்குறளையும் நினைக.

     வேலோய்! பொலிந்தோய்! அமைந்தோய்! மதியோய்! புணர்ந்தோய்! மலையோய்! வைத்தோய்! விடுத்தோய்! விரித்தோய்! பொலிந்தோய்! புலவனும் நீயே யாதலின் நின்கால் சென்னிதலைக் கொள்ளுதும்; அஃதெற்றுக்கெனின் எம்மொழிகொண்டு எம் அருத்தியும் பீழையும் காமமும் துயரமும் இறத்தலும் தண்டமும் பீழையும் இம்பரின் முடித்து இன்று மீளாக்காட்சி தருதி எனவே; என்று வினை முடிவு செய்க.

கடவுள் வாழ்த்து முற்றிற்று.