|
20
|
|
வானுட்க
முரற்று மலைச்சுனை குடைந்தும் |
|
25
|
|
பிரசமும்
வண்டு மிரவிதொறு மணியும்
வயிரமும் பொன்னு நிரைநிரை கொழித்துத்
துகினான்று நுடங்கு முருவி யேற்று
மறுவறு செம்மணி காற்கவ ணிறுத்தி
நிறைமதி கிடக்கு மிறால்விழ வெறிந்து |
|
30
|
|
மெதிர்சொற்
கேட்பக் கால்புகத் திகைத்த
நெருக்குபொழிற் புக்கு நெடுமலை கூயு
நுசப்பின் பகைக்கு நூபுர மரற்றப்
பைங்காடு நிரைத்த வெண்மலர் கொய்து
மனத்தொடு கண்ணு மடிக்கடி கொடுபோஞ் |
|
|
|
செம்பொன்
செய்த வரிப்பந்து துரந்து
மினைய பன்னெறிப் பண்ணை யெங்கு
மளவாக் கன்னிய ரிவரு
ளுளமாம் வேட்கைய ளின்னளென் றுரையே. |
(உரை)
கைகோள்: களவு. தோழி கூற்று.
துறை: அறியாள்போன்று
நினைவுகேட்டல்.
(இ-ம்.)
இதனை நாற்றமும் தோற்றமும் (தொல், களவி. 23) எனவரும் நூற்பாவின்கண், குறையுறற்கெதிரிய.......................இரு
நான்கு கிளவியும் என்பதன்கண் எஞ்சாது கிளந்த என்னும் மிகையால் அமைத்துக்கொள்க.
1-3:
பற்றலர்........................வேலவ
(இ-ள்)
பற்றலர் தெறுதலும் உவந்தோர் பரித்தலும்-பகைவரை அழித்தலாலும் நண்பரைப் பாதுகாத்தலாலும்
நிரலே; வெஞ்சுடர் என தண்மதி என-வெவ்விய ஞாயிறு போலும் குளிர்ந்த திங்கள் போலும்;
புகழ் நிறீஇய-உலகத்தே புகழை நிலைநிறுத்திய; நெடுஇலைகுறும்புகர் குருதி வேலவ-நெடிய இலையினையும்
சிறிய புள்ளிகளாய் அமைந்த குருதியினையுமுடைய வேற்படையினையுடையயோய் என்க.
(வி-ம்.)
பற்றலர்-பகைவர். தெறுதல்-அழித்தல். உவந்தோர்-நண்பர். பரித்தல்-பாதுகாத்தல்.
வெஞ்சுடர்-ஞாயிறு. தண்மதி-திங்கள். சுடரும் மதியும் எனல்வேண்டிய எண்ணும்மை தொக்கன.
இது நிரனிறையுவமை. தறுதலானும் பரித்தலானும் என மூன்றனுருபு விரித்துக்கொள்க. தெறுதலால்
வெஞ்சுடர் எனவும்
|