|
25
|
|
மறையுகு
நீர்க்குங் கருவுங் கரியும் |
|
30
|
|
வடிவ
மெட்டினுண் மகிழ்ந்த வொன்றுஞ்
சேண்குள மலர்ந்த செந்தா மரையுஞ்
சோற்றுக்கடன் கழிக்கப் பெற்றுயிர் கழிக்கு
மாசைச் செருநர்க் கடைந்துசெல் வழியு
மருளும் பொருளு மாகித் |
|
|
|
திருவுல
களிக்கும் பரிதிவா னவனே. |
(உரை)
கைகோள்: களவு. நற்றாய் கூற்று
துறை:- சுடரோடிரத்தல்.
(இ-ம்.)
இதனை, தன்னும் அவனும் அவளும் சுட்டி..................அவ்வழி யுரிய (தொல். அகத்.
36) எனவரும் நூற்பாவின்கண் தெய்வம் நன்மைதீமை அச்சம் சார்தல் என்று அன்னபிறவும்
அவற்றொடு தொகைஇ என்றதனால் அச்சம் காரணமாகத் தெய்வத்தை நோக்கிக் கூறியது
என்க.
23-31:
மலர்..........................வானவனே
(இ-ள்)
மலர்தலை உலகத்து இருள் எறி விளக்கும்-பரந்தவிடத்தையுடைய நிலவுலகத்தை மூடியுள்ள இருளை
அகற்றும் விளக்கும் ஆகி; மன்உயிர் விழிக்க கண்ணிய கண்ணும்-அவ்வுலகத்தே நிலைபெற்றுள்ள
உயிரினங்கள் விழித்துக் கொள்ளுதற்குக் காரனமாக கருதுகின்ற கண்ணும் ஆகி; மறைஉகு
நீர்க்கு கருவும் கரியும்-மறையோர் சொரிகின்ற நீருக்குக் காரணமும் அவர் சொரியுங்கால்
சான்றும் ஆகி; வடிவம் எட்டினுள் மகிழ்ந்த ஒன்றும்-இறைவனுடைய திருவடிவங்கள் எட்டனுள்
வைத்து உயிரினங்கள் மகிழ்வதற்குக் காரணமான ஒருவடிவமும் ஆகி; சேண்குலம் மலர்ந்த
செந்தாமரையும்-வானமாகிய நீர்நிலையின்கண் மலர்ந்த ஒரு செந்தாமரை மலர் ஆகியும்;
சோற்றுக்கடன் கழிக்கப் போற்று உயிர் கழிக்கும் ஆசைச்செறுநர்க்கு-தம்மன்னன் வழங்கிய
பெருஞ்சோற்றுத் திரளையை வாங்கியுண்ட கடனைத்தீர்த்தற்குப் போர்க்களத்தின்கண்ணே
தம்மாற் போற்றப்படுகின்ற உயிரைக் கொடுக்கின்ற புகழின்கண் அவாவினையுடைய போர்மறவர்க்குத்
தாம் இறந்துழி; அடைந்து செல்வழியும்-துறக்கம் அடைதற்குப் புகுந்து செல்லாநின்ற வழியும்
ஆகி; அருளும் பொருளும் ஆகி; எவ்வுயிர்க்கண்ணும் பரந்துபட்டுச்செல்லும் பேரன்புமாகி
அவ்வுயிரினங்கள் நுகரும் பொருள்களும் ஆகி; திருஉலகு அளிக்கும் கல்.-17
|