|
(வி-ம்.) அருள் தேனுக்கும்
அது நிரம்பிய சான்றோர்கள் தேனிறாலுக்கும் உவமைகள். மதி கிடக்கும்-மதிபோலக்
கிடக்கும் உவம உருபு வருவித்தோதுக. இனி இறாலும் மதியும் கிடக்குமாம் எனினுமாம். அமைந்த
கல்வி-அமைதற்குக் காரணமான கல்வி. அமைதல்-புலன்களிற் செல்லாது அடங்குதல். எழுமலை:
தொகை. சூரனுடைய தம்பி ஒளித்த மலையைப் பொடித்த வேல்கள் இயைபு காண்க.
7
- 9: வள்ளி.........................பிறையோன்
(இ-ள்) வள்ளிதுணைக்
கேள்வன் வள்ளிநாய்ச்சியாருக்கு ஒப்பாகிய கணவனாகிய முருகவேள்; புள்ளுடன் மகிழ்ந்த-தன்னுடைய
ஊர்தியாகிய மயிலோடும் கொடியாகிய சேவலோடும் மகிழ்ந்து வீற்றிருத்தற்கிடமான;
கரங்கு கால் அருவி பரங்குன்று உடுத்த-ஒலிக்கின்ற கால்களையுடைய அருவிகளையுடைய திருப்பரங்குன்றத்தை
ஒருபால் அணிந்துள்ள; பொன்நகர்கூடல்-பொன்னாலியன்ற மாடங்கலையுடைய நான்மாடக்கூடலாகிய
மதுரையின்கண் எழுந்தருளிய; சென்னி அம்பிறையோன்-திருமுடியின்கண் அழகிய பிறையுடையோனும்
என்க.
(வி-ம்.) துணை-ஒப்பு.
பிறப்பே
குடிமை ஆண்மை ஆண்டொடு
உருவு நிறுத்த காம வாயில்
நிறையே அருளே உணர்வொடு திருவென
முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே |
(தொல்.
மெய்ப்பா - 25)
|
என்பன. இவை பத்தும் வள்ளிக்கும்
முருகவேளுக்கு ஒப்பாதல் கூர்ந்துணர்க. புள்-மயிலும் கோழிச்சேவலும். கறங்கு-முழங்குகின்ற.
கால்-நீர்க்கால். இனி காலருவி வினைத்தொகையுமாம். நீர்காலும் அருவி என்க. உடுத்த-ஈண்டு
அணிந்த என்பதுபட நின்றது. திருப்பரங்குன்றம் மதுரையோடு ஒட்டி அதற்கு அணிசெய்து நிற்றலின்
பரங்குன்றுடுத்த கூடல் என்றார்.
10
- 14: பொதியப்..............................பெருமான்
(இ-ள்) பொதியப்
பொருப்பன்-பொதியமலையினை யுடைய பாண்டிய மன்னன்; மதி அக்கருத்தினை-தன் உள்ளத்தே
கருதுகின்ற அந்தக் கருத்தினைத் தெரிவிக்கும் பொருட்டு; கொங்குதேர் வாழ்க்கை
எனத் தொடங்கும். செந்தமிழ் கூறி-செவ்விய தமிழ்ப்பாவினை இயற்றிக் கொடுத்து,
பொற்குவை அப்பாட்டிற்குப் பரிசிலாகிய பொற்குவியலை, தருமிக்கு-தருமி என்னும் அன்பனுக்கு
அற்புடன் உதவி-அன்போடு வழங்கு
|