பக்கம் எண் :

மூலமும் உரையும்283



30
  கரத்த தாக்கி யந்தோ
வருத்தி மீட்பர் நிலைவல் லோரே.

(உரை)
கைகோள்; களவு, தலைவன் கூற்று

துறை: உலகின்மேல் வைத்துரைத்தல்.

     (இ-ம்.) இதற்கு, “மெய்தொட்டுப் பயிறல்” (தொல். கள. 11) எனவரும் நூற்பாவின்கண் ‘தோழி நீக்கலினாகிய நிலைமையு நோக்கி மடன்மா கூறும் இடனுமாருண்டே’ எனவரும் விதிகொள்க.

1-2: இருள்..............................சுமந்து

     (இ-ள்) மயல்வர இருளொடு தாரகை இரண்டினை மயக்கி-காண்போர்க்கு மயக்கமுண்டாகும்படி இருளும் விண்மீன்களும் ஆகிய இருவகைப் பொருளையும் கூட்டி; குழல்என மலர்என சுமந்து-தந்தலையிலே சேர்த்துக் கூந்தல் என்றும் மலர் என்றும் சுமந்துகொண்டு என்க.

     (வி-ம்.) இருளொடு என்புழி ஓடு எண்ணொடு. தாரகை-விண்மீங் இரண்டினையும் என்புழி முற்றும்மையும் குழலெனவும் மலரெனவும் எனல்வேண்டிய எண்ணும்மைகளும் தொக்கன. மயக்குதல்-சேர்த்துதல். மயல்-மயக்கம். காண்போர்க்கு மயல்வர என்க. இருள் கூந்தலுக்கும் தாரகை மலருக்கும் உவமை.

3-4: வில்............................பயிற்றி

     (இ-ள்) உயிர்விட வில்லினைக் குனித்துப் புருவம் என கணையினை வாங்கி கண்என-காணப்படுவோர்தம் உயிரை விடும்படி வில்லை வளைத்துப் புருவம் என்றும் அம்பினை ஏறிட்டுக் கண் எனவும்; பயிற்றி-பயிலச் செய்து என்க.

     (வி-ம்.) காண்போர்-காணப்படுவோர்தம் உயிர்விட என்க. வில்லினைக் குனித்தும் கணையினை வாங்கியும் கண்ணெனவும் எனல் வேண்டிய உம்மைகள் தொக்கன. எனவும் என்பதனைப் புருவத்தோடும் ஒட்டுக. பயிற்றுதல்-இயங்குவித்தல். வில் புருவத்திற்கும் கணை கண்ணிற்கும் உவமை.

5-6: மலை.....................வைத்து

     (இ-ள்) முலை எனவர-முலை என்று சொல்லவரும்படி; மலையினைத் தாங்கி-மலகளைச் சுமந்தும்; சொல் என வர-சொல்லென்று சொல்லவரும்படி; அமுதினைக் கடைந்து வைத்து-அமிழ்தத்தைக் கடைந்தெடுத்துத் தம்வாயில் வைத்துக்கொண்டும் என்க.