பக்கம் எண் :

284கல்லாடம்[செய்யுள்33]



     (வி-ம்.) தாங்கியும் வைத்துமெனல்வேண்டிய உம்மைகள் தொக்கன. முலையெனவர எனப் பிரித்துக் கூட்டுக. மலை முலைக்கும் அமுது சொல்லிற்கும் உவமை.

7-8: மெய்.................................கொடுத்து

     (இ-ள்) நெஞ்சு உழல-காண்போர் மனம் சுழலும்படி; மெய்யினை அல்குல் என பரப்பி-உண்மையினை அல்குல் என்று கருதும்படி பரப்பிவைத்தும்; பொய்யினை இடை எனக்காட்டி-பொய்யை இடை என்னும் ஓர் உள்பொருள்போலக் காட்டியும்; கொடுத்து-வழங்கியும் என்க.

     (வி-ம்.) மெய்-உண்மை. இஃது எப்பொருளினும் பெரிதாகலின் அல்குலுக்கு உவமை கூறினார். பொய்-இல்பொருள். இடை-இல்லை என்னும்படி நொய்தாயிருத்தலின் இல்லாததொன்றினையே உள் பொருளாகக் காட்டினார் என்றபடி. காட்டுதல்-புலப்படச்செய்தல்.

9-10: முண்டகம்.........................நிறீஇய

     (இ-ள்) முண்டகம் மலர்த்தி-தாமரை மலரை மலர்வித்து; அடிஎன-காண்போர் அடிகள் என்று கருதும்படி செய்தும்; மாந்தளிர் மூடி-மாந்தர்களால் மறைத்து; உடல் என-திருமேனி என்று கருதும்படி செய்தும்; அலமரல் நிறீஇய-அவர் மனத்தின்கண் சுழற்சியை நிறுத்திய என்க.

     (வி-ம்.) மலர்த்தியும் மூடியும் அடி எனவும் உடலெனவும் நிறீஇயும் எனல வேண்டிய உம்மைகள் தொக்கன. அலமரல்-சுழலல். நிறீஇ-நிறுத்தி. (1-10) இருள்போன்ற கூந்தலையும் அதன்மேற் சூட்டிய விண்மீன் போன்ற மலர்களையும் வில்லையொத்த கண்களையும் மலைபோன்ற முலைகளையும் அமிழ்தம்போன்ற மொழிகளையும் அகன்ற அல்குலினையும் இல்லையோ என்னும்படி ஐயுறுதற்குக் காரணமான இடையினையும் செந்தாமரை மலர்போன்ற அடியினையும் மாந்தளிர் போன்ற மேனியினையும் உடையராகக் காண்போரை மயக்கி மனம் சுழலச்செய்யும் மகளிர் என்பது கருத்து. இவையெல்லாம் விகாரம் வேறுபட வந்த உவமத்தோற்றம் என்பர் ஆசிரியர் தொல்காப்பியனார். நிறுத்திய (25) மகளிர் என இயையும்.

11-17: மூரி..............................குறளினை

     (இ-ள்) மூரிவீழ்ந்த நெறிச்சடை முனிவர்-நெரிந்து திரண்ட அறலுடைய சடையினையுடைய தாருக வனத்து இருடிகள்; கண் சிவந்து உள்ளங்கறுத்து தழல் குழிதொட்டு-பகைமையாலே கண்சிவந்து உளம் வெகுண்டு தீக்குழி தோண்டி; சருக்கங்காட்டும் அருமறை மந்திரம் சொல்லி இட்ட-சருக்கம் என்னும் உறுப்பினையுடைய உணர்தற்கரிய வேதமந்திரத்தை