பக்கம் எண் :

மூலமும் உரையும்285



ஓதி நெய் முதலியன பெய்யப்பட்ட அவ்வேள்விக் குழி; வயிறு வருந்தி முன்பின் ஈன்ற-வயிறுளைந்து தன் வலிமையினாலே ஈன்றுவிட்ட; பேழ்வாய் புலியினை-பெரிய வாயினையுடைய புலியையும்; கைதைமுள் செறித்த கூர் எயிற்று அரவினை-தாழையின் முட்களைச் செறித்து வைத்தாற் போன்ற கூர்த்த பற்களையுடைய பாம்பினையும்; கார் உடல் பெற்ற தீவிழிக் குறளினை-கரிய உடம்பினையும் தீக்காலும் விழிகலையும் படைத்துள்ள முயலகன் என்னும் பூதத்தினை என்க.

     (வி-ம்.) மூரி-நெரிவு; பருமையுமாம். வீழ்தல்-ஈண்டுத் திரளுதல். நெறி-அறல். முனிவர்-தாருகவனத்து இருடிகள். தழல்குழி-ஓமகுண்டம். சருக்கம்-ஒரு நூலுறுப்பு. முன்பு-வலிமை. தாருகவனத்து இருடிகள் சிவபெருமானிடத்துப் பகைத்துக்கொண்டு அவரை அழித்தற்பொருட்டு அபிசாரயாகம் செய்து அவ்வேள்வித் தீயினின்றும் புலி, பாம்பு, பூதம் முதலியவற்றைத் தோற்றுவித்து விடுப்ப என்பது கருத்து.

18-20: உரி...............................நாயகன்

     (இ-ள்) உரிசெய்து உடுத்து-உரித்துத் தோலைப்போர்த்தும்; செங்கரம் தரித்து-சிவந்த கையிலே அணிந்தும் செம்மலர் பழித்த தாள்கீழ் கிடத்தி-செந்தாமரை மலரைப் பழித்தற்குக் காரணமான திருவடிகளின் கீழே கிடத்தியும்; அரும் நடம் புரிந்த தேவர் நாயகன்-திருவருட்கூத்தியற்றிய தேவர்களுக்குத் தலைவனாகிய சிவபெருமான் என்க.

     (வி-ம்.) புலியினை உரித்து உடுத்தும், அரவினைக் கரத்திற்றரித்தும் குறளினைத் தாள்கீழ் கிடத்தியும் நடம்புரிந்த நாயகன் என்க.

21-25: ஒருநாள்..........................மகளிர்

     (இ-ள்) ஒருநாள் மூன்றுபுரம் தீக்கொளுவ-பண்டொரு காலத்தே முப்புரத்தைத் தீயிட்டெரித்தற் பொருட்டு; பொன்மலை பிடுங்கிக் கார்முகம் என்ன வளைத்த ஞான்று-வானத்தைத் தாங்கும் பொன்மலையாகிய மேருவினைப் பறித்தெடுத்து வில்லாக வளைத்தபொழுது முன்னம் அம்மலையாற் றாங்கப்பட்ட; நெடுவிண் தடை- நெடிய வானம் வீழ்ந்துவிடாமல் தடுத்தற் பொருட்டு; கால் கொடுத்தன்ன-தூண்களை நாட்டினாற்போல; கந்திகள் நிமிர்ந்து நெருக்கு பொழில்-கமுகுகள் வான்முட்ட வளர்ந்து நெருங்கி நிற்றலையுடைய சோலையையுடைய; கூடல் அன்ன செம்மகளிர்-மதுரைமா நகரத்தை யொத்த சிறப்பினையுடைய செவ்விய மகளிர்களுடைய என்க.

     (வி-ம்.) ஒருநாள் என்றது பண்டொரு காலத்தே என்பதுபட நின்றது. அண்டத்தை தாங்கி நின்ற பொன்மலையைப் பிடுங்கி