பக்கம் எண் :

மூலமும் உரையும்311



தம் கூட்டிற் புகுந்து; அலகுபெடை அணைய-அழகிய அலகினையுடைய தம் பெடைகளைத் தழுவா நிற்பவும் என்க.

     (வி-ம்.) தணத்தல்-பிரிதல். மணத்தல்-கூடுதல். அமுத நீர்-அமுதத் தன்மை; என்றது இன்பத்தை. அன்றில்-துணைபிரிந்து வாழாத இயல்புடைய ஒருவகைப் பறவை. புல்-ஈண்டுப் பனை. அன்றில் அலகால் சிறப்புடையன ஆதலால் அலகுபெடை என்றாள். பெடை-பெண்அன்றில்.

11-12: அந்தணர்.........................மறுப்ப

     (இ-ள்) அந்தணர் அருமறை அருங்கிடை அடங்க-அந்தணர்க்குரிய உணர்தற்கரிய வேதங்கள் பிறர்புகுதற்கரிய கிடையிடத்தே ஒலியவிந்து அடங்கவும்; முதிர்கனிமூலம் முனிக்கணம் மறுப்ப-முதிர்ந்த பழங்களையும் கிழங்குகளையும் துறவோர் கூட்டங்கள் உண்ணாது மறுப்பவும் என்க.

     (வி-ம்.) அந்தணர்-பார்ப்பனர். உணர்தற்கரிய மறை என்க. கிடை-வேதமொதும் பள்ளி. இனி வேதியர் குழாமுமாம். துறவோர் இரவின்கண் உண்ணா நோன்பினையுடையோராகலின் உணவினை மறுப்ப என்க. மூலம்-கிழங்கு. முனிக்கணம்-துறவோர் கூட்டம்.

13-15: கலவை.....................விளைப்ப

     (இ-ள்) கலவையும் பூவும் தோள்முடி கமழ-சந்தனக் குழம்பும் மலர் மாலைகளும் தம்முடைய தோளிலும் முடியிலும் கமழா நிற்ப; விரிவலை நுளையர்-விரிகின்ற வலையினையுடைய பரதவர்; நெய்தல் ஏந்தி-நெய்தல் யாழினைக் கையில் ஏந்தி; துத்தம் கைக்கிளை அளவையின் விளைப்ப-துத்தமென்னும்பண்ணையும் கைக்கிளை என்னும் பண்ணையும் இசைநூல் இலக்கணத்திற்கிணங்கத் தோற்றுவியாநிற்பவும் என்க.

     (வி-ம்.) கலவை-நறுமணப்பொருள் கலந்த சந்தனக் குழம்பு. தோளில் கலவையும் முடியில் பூவும் கமழ என நிரனிறையாகக் கொள்க. விரிவலை: வினைத்தொகை. நுளையர்-நெய்தனில மாக்கள். நெய்தல்: ஆகுபெயர். நெய்தலியாழ் என்க. துத்தம் கைக்கிளை என்பன இசைவகைகள்.

16-17: நீர்......................மலர

     (இ-ள்) பசுந்தாள் சேகொள் ஆம்பல்-பசிய தண்டினையும் சிவந்த நிறத்தையுமுடைய அரக்காம்ப லரும்புகள்; நீர் அரமகளிர் செவ்வாய் காட்டி மலர-நீரர மகளிர் என்னும் தெய்வ மகளிரின் சிவந்த வாய்போலக் ஆட்டி மலராநிற்பவும் என்க.

     (வி-ம்.) ஆம்பல் வாய்போல் மலர என்க. நீரரமகளிர்-நீரில் வாழும் ஒருவகைத் தெய்வமகளிர். சே-செந்நிறம். செவ்வாய் காட்டிப்