|
30
|
|
நிரைநிரை
வணங்கி மதகெதிர் கொள்ளத்
தண்ணடைக் கணவற் பண்புடன் புணரும்
வையை மாமாது மணத்துடன் சூழ்ந்த
கூடற் பெருமான் பொன்பிறழ் திருவடி
நெஞ்சிருத் தாத வஞ்சகர் போலச் |
|
|
|
சலியாச்
சார்பு நிலையற நீங்கி
யரந்தை யுற்று நீடநின் றிரங்கு
முருந்தெயிற் றிளைம்பிறைக் கோலந்
திருந்திய திருநுதற் றுகிரிளங் கொடிக்கே. |
(உரை)
கைகோள்: களவு. தோழி கூற்று
துறை: வழியொழுகி
வற்புறுத்தல்.
(இ-ம்.)
இதற்கு, நாற்றமும் தோற்றமும் (தொல். கள. 23) எனவரும் நூற்பாவின்கண் ஆங்கதன்
றன்மையின் வன்புறை உளப்படப் பாங்குற வந்த நாலெட்டு வகையும் என்புழி வன்புறை என்னும்
விதிகொண்டு தலைவனது வரைபொருட் பிரிவினை ஆற்றாத தொழி அவள்வழி யொழுகி அவளைப்
பாராட்டுமுகத்தான் ஆற்றுவித்து என்று கொள்க. இதற்கு மேலே காட்டியுள்ள வன்புறை யெதிரழிந்திரங்கல்
என்னும் தலைவி கூற்றாய் வரும் திருக்கோவைச் செய்யுள் பொருந்துமாறில்லை. ஒரோவழி
அதற்கு முற்செய்யுளாகிய வழியொழுகி வற்புறுத்தல் என்னும் துறை பற்றிவரும் தோழி கூற்றாகிய,
| |
மதுமலர்ச் சோலையும்
வாய்மையும்
அன்பும் மருவிவெங்கான்
கதுமெனப் போக்கும் நிதியின்
அருக்குமுன் னிக்கலுழ்ந்தால்
நொதுமலர் நோக்கமொர் மூன்றுடை
யோந்தில்லை நோக்கலர்போல்
இதுமலர்ப் பாவைக்கென் னோவந்த
வாறென்ப ரேந்திழையே. (திருக்கோவை.
275) |
சூழிருங் கூந்தலைத்
தோழி தெருட்டியது |
இப்பாட்டுப் பொருந்துதல்
கூடும். இதனை ஆராய்ந்து கொள்க.
13-16:
வெடிவால்............................அந்தணன்
(இ-ள்)
வெடிவால் பைங்கண் குறுநரி இனத்தினை-வெடித்த வாலினையும் பசிய கண்களையுமுடைய குறிய
நரித்
|