|
திரளை; ஏழ் இடம் தோன்றி-ஏழிடங்கள்
உயர்ந்து காணப்பெற்று; இனன்நூற்கு இயைந்து-குதிரைக் கூட்டத்திற்கு இலக்கனம் கூறும்
நூல்விதிக்குப் பொருந்தி; வீதிபோகிய வால் உளைப்புரவி ஆக்கிய-மதுரைமா நகரத்தின்
வீதியிலே செல்லும் வெள்ளிய பிடரிமயிரையுடைய குதிரைகளாக்கிய; விஞ்சைப் பிறைமுடி
அந்தனன்-வித்தையினையுடைய பிறையினையுடைய முடியினையுடைய அந்தணனாகிய என்க.
(வி-ம்.)
வெடிவால்-பாறிய மயிரையுடைய வால். வீதி-மதுரைமா நகரத்து வீதி என்க. வால்-வென்மை.
உளை-பிடரிமயிர். விஞ்சை-வித்தை. அந்தணன்-இறைவன.் அறவாழி அந்தணன் எனத் திருவள்ளுவரும்
ஓதுதல் காண்க. இன்னூற்கியைந்து என்புழி இருநூற்கியைந்து எனவும் பாடம் உண்டு.
17-26:
கொண்டோற்...........................எதிர்கொள்ள
(இ-ள்)
அன்னையர் இல்லத்து அணிமட மங்கையர்-தாய்வீட்டின்கண் ணிருக்கின்ற அழகும் மடப்பமுமுடைய
மகளிர்கள்; கொண்டோற்கு ஏகும் குறிஉடை நன்னாள்-தம்மை மணந்த கணவன் வீட்டிர்குச்
செல்லுதற்கெனக் குறித்த குறிப்புடைய நல்ல நாளிலே; கண்டன கவரும் காட்சிபோல-தாயில்லத்தே
தாம் கண்டகண்ட பொருள்களை யெல்லாம் கவர்ந்துகொண்டு செல்லுகின்ற தோற்றத்தைப்போல;
வேலன் பேசி மறி செகுத்து ஓம்பிய-மழை பெய்தலைக் குறித்து வெறியாட்டாளன் வாழ்த்தி
ஆடு பலியிட்டுப் பூசனைசெய்த; காலங் கோடோ-காலம் மாறுபடாமல்; வரைவளர் பண்டம்-மலையிற்றோன்றுகின்ற
பொருள்களுள் வைத்து; வருவன வாரி-வருவனவற்றை யெல்லாம் வாரிக்கொண்டு; வண்டு இனம்
தொடர-வண்டுக் கூட்டங்கள் தன்னைப் பின்தொடர்ந்து வாரா நிற்ப; கயல்கண் விழித்து-கயல்
மீன்களாகிய தன் கண்களை விழித்து; பூதுகில் மூடி-மலர்களாகிய ஆடையால் திருமேனியை
மூடிக்கொண்டு; குறத்தியர் குடத்தியர் வழிவிட நடந்து-குற மகளிரும் இடை மகளிரும் தன்பின்னே
வந்து வழிவிடா நிற்ப நிரலே குறிஞ்சி நிலத்தினையும் முல்லை நிலத்தினையும் நடந்து
கடந்து; கருங்கால் மள்ளர் உழவச்சேடியர்-கரிய காலையுடைய உழவர்களும் உழத்தியராகிய
தோழிமாரும்; நிரைநிரை வனங்கி மதகு எதிர்கொள்ள-முறைமுறையாக வணங்கி மதகுதொறும்
வந்து தன்னை எதிர்கொள்ளா நிற்பவும் என்க.
(வி-ம்.)
அணியும் மடமும் உடைய மங்கையர் என்க. கொண்டோர்க்கு-கணவன் இல்லிற்கு என்க. கணவன்
வீட்டிற்குச் செல்லுதற்கு நன்னாள் கோடல் மரபாகலின் குறியுடை நன்னாள் என்றார்.
கண்டன-தாம் சிறப்பாகக் கண்ட பொருள்களையெல்
|