|
25
|
|
அல்லெனு
மங்கை மெல்லெனப் பார்க்க
முரன்றெழு கான முயன்றுவா தியைந்த
வடபுல விஞ்சையன் வைகிடத் தகன்கிடைத் |
|
30
|
|
தென்றிசைப்
பாண னடிமை யானெனப்
போகா விறகுடன் றலைக்கடை பொருந்தி
யுந்தித் தோற்ற மோசைநின் றொடுங்கப்
பாலையி லெழுப்பி யமரிசை பயிற்றித்
தூங்கலுந் துள்ளலுஞ் சுண்டிநின் றெழுதலுந் |
|
35
|
|
தாரியிற்
காட்டித் தருஞ்சா தாரி
யுலகுயி ருள்ளமு மொன்றுபட் டொடுங்க
விசைவிதி பாடிய விசைப்பகை துரந்த
கூடற் கிறையோன் றாள்விடுத் தோரென
என்கண் டுஞ்சா நீர்மை |
| |
|
முன்கண்
டோதா தவர்க்குநங் குருகே. |
(உரை)
கைகோள்: களவு. தலைவிகூற்று
துறை: அன்னமோடழிதல்.
(இ-ம்)
இதற்கு, "மறைந்தவற் காண்டல்" (தொல், கள, 20) எனவரும் நூற்பாவின்கண், இட்டுப்
பிரிவிரங்கினும்' எனவரும் விதி கொள்க.
1
- 4: கவை...........................................துயில
(இ-ள்)
கவைத்துகிர் - கிளைகளையுடைய பவளக் கொடிகள்; வடைவையின் திரள்சிகை பரப்பி - வடவைத்
தீயைப் போலத் திரண்ட தம்முடைய கொழுந்துகளை யாண்டும் பரப்ப; அரைபெறப் பிணித்த
- தமது இடையில் அமையக் கட்டிய; கல்குளி மாக்கள் - முத்து முதலிய மணிகளை நீரில்
முழுகி எடுக்கும் மாந்தர்களுடைய; உள்ளம் தீக்கும் - நெஞ்சினைச் சுடுகின்ற; உவர்கடல்
உடுத்த - உப்பினையுடைய கடல் சூழ்ந்த; தண்நாவலம் பொழில் - தண்ணிய இந்நாவலம்
பொழிலிலுள்ள உயிரினங்கள் எல்லாம்; இன்புடன் துயில - இன்பத்தோடே துயிலா நிற்பவும்
என்க.
(வி-ம்.)
கவை - கிளை. துகிர் - பவளக்கொடி. வடவை - வடவைத்தீ. இது பவளக்கொழுந்திற் குவமை.
முத்துக் குளிப்போர் ஆண்டுள்ள பவளக்கொடிகளைக் கைப்பற்றி இடையிற் கட்டிக்கொள்வர்
என்பது கருத்து. கல்-முத்து முதலிய மணிகள். உப்பு
|