|
(உரை)
கைகோள்: களவு தோழிகூற்று
துறை: தழைவிருப்புரைத்தல்.
(இ
- ம்.) இதற்கு "நாற்றமும் தோற்றமும்" (தொல். களவி. உங) எனவரும்
நூற்பாவின்கண் 'நன்னயம் பெற்றுழி நயம்புரி இடத்தினும்' என்னும் விதி கொள்க.
1
- 3: அறுகும் , , , , , , , , , , கானவனாகி
(இ-ள்)
அறுகுந் தும்பையும் அணிந்த செஞ்சடையும் - அறுகம்புல்லையும் தும்பை மலரையும் அணிந்த
சிவந்த சடையினையும்; கலைமான் கணிச்சியும் கட்டிய அரவமும் - கலைமானையும் மழுவையும்
அரையிற் கட்டிய பாம்பினையும்; பிறவும் கரந்து ஒரு கானவன் ஆகி - இன்னோரன்ன பிறவற்றையும்
மறைத்துக் கொண்டு ஒரு வேடுவனாய்த் தோன்றி என்க.
(வி-ம்.)
தும்பை: ஆகுபெயர். கலைமான் - ஆண்மான் கணிச்சி - மழு. அரையிற் கட்டிய அரவமும் என்க.
பிற - பிறை முதலியன. கானவன் - வேடன்.
4
- 7: அருச்சுனன் , , , , , , , , , , , , , செய்தேன்
(இ-ள்)
அருச்சுனன் அருந்தவம் அழித்து - அருச்சுனனுடைய செயற்கரிய தவநிலையைக் குலைத்து; அமர்
செய்து - அவனோடு போராடி; அவன் கொடுமரத்தழும்பு திருமுடிக்கு அணிந்து - அவன் வில்லால்
அடித்தமையால் உண்டான வடுவினைத் தனது அழகிய முடியின்கண் தாங்கி; பொன்உடை ஆவம்
தொலையாது சுரக்க - அழகினையுடைய அவனது அம்பறாத்தூணி வற்றாது அம்புகளை வழங்குமாறு செய்து;
பாசுபதக்கணை பரிந்து அருள் செய்தேன் - மேலும் பாசுபதம் என்னும் அம்பினையும் அன்பு
கூர்ந்து வழங்கிய சிவபெருமானுடைய என்க.
(வி-ம்.)
அருச்சுனன் - பாண்டு மக்கள் ஐவருள் நடுப்பிறந்தேன். அவன் செய்த தவத்திற்கு இரங்கிச்
சிவபெருமான் வேடவடிவங்கொண்டு வந்து, அவனைக் கொல்ல வந்து மறைந்திருந்த பன்றியாகிய
மூகதானவனைக் கொண்று, அதன் பொருட்டுவல் வழக்குப் பேசிப் போர்புரிந்து, வில்லாலடிப்பட்டு
அவ்வடித் தழும்பு எல்லாயுயிர்க்குங் கொடுத்துப் பின்னர்த் திருவுருவு காட்டி அவனுக்குப்
பாசுபதக்கணை வழங்கினர் என்பது வரலாறு. இதன் விரிவு பாரதக் கதையுட் காண்க.
ஆவம்
- அம்புக்கூடு. ஆவம் தொலையாது சுரத்தலாவது அம்பினை எடுக்க எடுக்க எடுக்க வறிதாகாமல்
அம்புகளா னிறைதல். பாசுபதக்கணை- சிவபெருமானுக்குரிய அம்பு.
|