பக்கம் எண் :

386கல்லாடம்[செய்யுள்49]



"வெந்நிடு வார்போற் வட்டித்து விளித்து மீள்வர்
 கொன்னிடு வாண்மார் பேற்பர் குறிவழி பிழைத்து நிற்பர்"
                                  திருவளை. அங்கம் 12)

எனவும் வரும் பரஞ்சோதி முனிவர் வாக்கானு முணர்க.

17 - 21: கூடல் . . . . . . . . . . மயக்கே

     (இ-ள்) கூடல் அம் கானல் - மதுரையைச் சார்ந்த அழகிய கடற்கரைச் சோலையில்; சேவல் அன்னம் பெடையுடன் புல்லி - ஓரன்னச் சேவல் தன் பெடையன்னத்தைத் தழுவி; திருமலர் கள்ளினை - அழகிய தாமரை மலரின்கண் உண்டான தேனை; அம்மலர் வள்ளம் ஆக - அத்தாமரை மலரே கிண்ணமாகக் கொண்டு; நின்று உதவுதல் கண்டு கண்டு - அப்பெடை யன்னத்தின் பக்கத்திலே தானே நின்று உண்பித்தலைப் பார்த்துப் பார்த்து; ஒருவன் - ஒரு நம்பி; பாழ்கி விண்டு உயிர் சோர்ந்த - மயங்கி நிலைமாறித் தனது உயிர் தளர்ந்த; மயக்கு நிலைக்குறி- மயக்கத்தையுடைய நிலைமையினை எய்தின குறிப்பினை என்க.

     (வி-ம்.) கானல் - கடற்கரைச் சோலை. பெடையுடன் : உருபு மயக்கம். 'பூவினுட் சிறந்தது பொறிவாழ் பூவே' என்றமையால் திருமலர் என்றது தாமரை மலர் என்றாயிற்று. கல் - தேன். வள்ளம் - கிண்ணம். ஒருவன் என்றது தலைவனை. மயக்க நிலைக்குறி என மாறுக.

4 - 6: நின்னொளி . . . . . . . . . . புரக்கலை

     (இ-ள்) நின் ஒளிவளர் நோக்கம் உற்றனை ஆயின் - உன்னுடைய ஒளிமிக்க கண்களாலே பார்த்திருப்பாயாயின்; இன்உயிர் வாழ்க்கை - நினது இனிய உயிரின் வாழ்க்கையை; உடலொடும் புரக்கலை நின்னுடலிடத்தே வைத்துப் பாதுகாப்பாயல்லை; துறப்பாய், யான் வன்கண்மையுடையே னாகலின் அதனைக் கண்டு வைத்தும் ஆற்றியிராநின்றேன் என்க.

     (வி-ம்.) துறப்பாய் என்பதும் யான் வன்கண்மையுடையேனாகலின் அதனைக் கண்டுவைத்தும் ஆற்றியிரா நின்றேன் என்பதும் குறிப்பெச்சம். கூர்த்த நோக்குடையை என்பாள் ஒளிவளர் நோக்கம் என்றாள். புரக்கலை - தபுரப்பாயல்லை. புரத்தல்- காப்பாற்றுதல்.

     இனி, இதனைப் 'புதுமுகத்தணங்கே' அடியாற்கு உதவுதல் வேண்டி வாளெடுத்து அமரேறிப் பகைமுறித்த கடவுளுடைய கூடற்கானலிலே அன்னச்சேவல் பெடையைப் புல்லிக் கள்ளினை அதற்கு உதவுதல் கண்டுகண்டு ஒருவன் மாழ்கி உயிர் சேர்ந்த கறிப்பை நீ நோக்கமுற்றனையாயின் நீ உயிர்வாழ்க்கை போற்றுவாயல்லை!' என வினைமுடிவு செய்க. மெய்ப்பாடும் பயனும் அவை.