பக்கம் எண் :

மூலமும் உரையும்385



அடர்த்தல் உள்கையின் முறித்தல் ஆநநத்து ஒட்டல் - ஒருவரொருவரைப் பற்றிநின்று போர்செய்தலும் கைக்குள் அடக்கி முறித்தலும் கேடகத்துள் தாழ்ந்து முகத்தோடு அடங்குதலும் என்க.

     (வி-ம்.) அடியான் - ஈண்டு வாளாசிரியன் மண்ணவர்காண என்றது திருமால் முதலிய தேவர்களும் காணவொண்ணாத தான் இந்நில உலகத்தார் காணும்படி வந்து என்றவாறு. வட்டணை - கேடகம். ஆதிசாரணை, அடர்நிலைப் பார்வை, வாளுடன் நெருக்கல், மார்பொடு முனைதல், பற்றி நின்றடர்த்தல், உட்கையின் முறித்தல் முதலியன வாட்போர்த் தொழில்வகை. ஆநநம் - முகம்.

12 - 16: அணி . . . . . . . . . . கடவுள்

     (இ-ள்) அணிமயில் புரோகம் - அழகுள்ள மயிலைப் போலும் ஞமலியைப்போலும் நிரலே பின்னே பறிந்து முன்னே நடத்தலும்; உள்கலந்து எடுத்தல்-ஒருவருடல் ஒருவருடலொடு மயங்கி மேலுறவெடுத்தலும்; ஒசிந்து இடம் அழைத்தல்- வளைந்து கொடுத்து இடப்புறமாக வருவித்தலும்; கையொடு கட்டல் - ஒருவர் கையோடு ஒருவர்கை பொருந்தும்படி கட்டி இறுக்குதலும்; கடிந்து உள்அழைத்தல்- விலகச்செய்து மீண்டும் தம்பால் வருவித்துக் கோடலும்; என்று இவ்வகை பிறவும்- என்று கூறப்படும் இந்த வாட்போர்த் தொழில் வகையும் இன்னோரன்ன பிறவும்; எதிர் அமர் ஏறி - எதிர்ப்படுகின்ற வாட்போரின்கண் பெரிதும் முயன்று; அவன்பகை முறித்த -அவ்வடியவனுடைய பகைவனாகிய சித்தன் என்னும் மாணாக்கனுடைய உறுப்பிக்களைத் தனித்தனி, துணித்தருளிய; அருள் பெருங்கடவுள் - அருளுருவமாகிய முழுமுதற் கடவுள் எழுந்தருளியுள்ள என்க.

     (வி-ம்.) மயில்போலப் பின்னிட்டுத் தாக்கலும் புரோகம்போல முன்னேறித் தாக்கலும் என்க. இவையும் உள்கலந்து எடுத்தல், ஒசிந்து இடம் அழைத்தல், கையொடு கட்டல், கடிந்து உள்ளழைத்தல் என்பனவும் வாட்போர்த் தொழில்வகை என்க. பிறவும் என்றது ஈண்டுக் கூறப்படாத இன்னோரன் னபிற தொழில்கள் என்றவாறு. அவன் என்றது அடியவனாகிய வாளாசிரியனை. பகை என்றது அவன் பகைவனாகிய சித்தனை. கடவுள் - சோமசுந்தரக்கடவுள். இதனைத் திருவிளையாடற் புராணத்தில் 27. அங்கம்வெட்டின படலத்தின்கண் விரிவாக உணர்க. வாட்போர் வகையினை.

"எதிர்ப்பர்பின் பறிவர் நேர்போ யெழுந்துவா னேறு பேல
 அதிர்ப்பர்கே டகத்துட் டாழ்வுற் றடங்குவர் முளைப்பர் வாளை
 விதிர்ப்பர்சா ரிகைபோய் வீசி வெட்டுவர் விலக்கி மீள்வர்
 கொதிப்பர்போய் நகைப்ப ராண்மை கூறுவர் மாறி நேர்வர்"
                                 (திருவிளை. அங்கம். 17)

எனவும்,