|
|
|
வொன்னல
ரிடுந்திரைச் செலினுந்
தன்னிலை கடவா தவன்பரித் தேரே. |
(உரை)
கைகோள்: கற்பு; செவிலி கூற்று.
துறை: வாழ்க்கை
நலங்கூறல்
(இ-ம்.)
இதுவுமது.
1
- 4: பெண்.................................... அன்னை
(இ-ள்)
பெண் என பெயரிய பெருமகள் குலனுள்-பெண்ணென்று பெயருள்ள பெருந்தகை மகளிர் கூட்டத்துள்;
உணாநிலன் உண்டு பராய அப்பெருந்தவம்- மகட்பேறு கருதி உணவினை நிலத்தை மெழுகி அதில்
உண்டு நோற்ற அந்தப் பெரிய தவத்தின் பயனானது; கண் உற உருப்பெறும் காட்சியது என்ன-கண்கூடாகக்
காணுமாறு ஒரு வடிவெடுத்து வந்த காட்சிபோல; கருஉயிர்த்து எடுத்த குடிமுதல் அன்னை - நம்
செல்வியைக் கருக்கொண்டு ஈன்றெடுத்த இவ்வுயர் குடிக்குத் தலைவியாகிய தாயே கேள்!
என்க.
(வி-ம்.)
பெண்எனப் பெயரிய என்றது பெண் என்று சான்றோரால் உயர்த்துக் கூறப்படும் பெயரையுடைய
என்பதுபட நின்றது.
"பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னுந்
திண்மையுண் டாகப் பெறின்" (குறள்) |
எனவரும் திருக்குறளை
ஈண்டு நினைக. பெருமகள் குலன - பெருந்தகைப் பெண்டிர் குழு. நிலன் உண்டு - நிலத்தை
மெழுகி அதில் உணவையிட்டு உண்டு என்க. தவன்-தவப்பயன். நம் செல்வியைக் கருவுயிர்த்து
எடுத்த என்க. குடி என்றது ஏசாச் சிற்ப்பின் இசை விளங்கும் இக்குடி என்பதுபட நின்றது.
5
- 9: நின்னையும்........................ மதனே
(இ-ள்)
அன்னவள் அருங்கற்பு - அம்மகளது பெறலருங் கற்புடைமை; நின்னையுங் கடந்தது - நின் கற்புடைமையினுங்
காட்டில் மிகவும் மேம்பட்டது காண்; நலனவள் பொறை அக்கற்பு நலமுடைய அவளது பொறுமை;
கடல் மூழ்கி அரிபெறும் அருள் பெற்ற நிலமகள் கடந்தது-கடலின் மூழ்கிப் பின்னர்த்
திருமால் தோற்றுவித்தலால் அவனைக் கணவனாகப் பெறும் அருளைப்பெற்ற நிலமகள் பொறுமையினுங்
காட்டில் மேம்பட்டது; வாய்மையின் மதன் அவளது வாய்மையின் மாண்பு; இருவினை நாடி உயிர்தொறும்
அமைத்த ஊழையுங்
|