பக்கம் எண் :

462கல்லாடம்[செய்யுள்62]



  வொன்னல ரிடுந்திரைச் செலினுந்
தன்னிலை கடவா தவன்பரித் தேரே.

(உரை)
கைகோள்: கற்பு; செவிலி கூற்று.

துறை: வாழ்க்கை நலங்கூறல்

     (இ-ம்.) இதுவுமது.

1 - 4: பெண்.................................... அன்னை

     (இ-ள்) பெண் என பெயரிய பெருமகள் குலனுள்-பெண்ணென்று பெயருள்ள பெருந்தகை மகளிர் கூட்டத்துள்; உணாநிலன் உண்டு பராய அப்பெருந்தவம்- மகட்பேறு கருதி உணவினை நிலத்தை மெழுகி அதில் உண்டு நோற்ற அந்தப் பெரிய தவத்தின் பயனானது; கண் உற உருப்பெறும் காட்சியது என்ன-கண்கூடாகக் காணுமாறு ஒரு வடிவெடுத்து வந்த காட்சிபோல; கருஉயிர்த்து எடுத்த குடிமுதல் அன்னை - நம் செல்வியைக் கருக்கொண்டு ஈன்றெடுத்த இவ்வுயர் குடிக்குத் தலைவியாகிய தாயே கேள்! என்க.

     (வி-ம்.) பெண்எனப் பெயரிய என்றது பெண் என்று சான்றோரால் உயர்த்துக் கூறப்படும் பெயரையுடைய என்பதுபட நின்றது.

"பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னுந்
 திண்மையுண் டாகப் பெறின்"                (குறள்)

எனவரும் திருக்குறளை ஈண்டு நினைக. பெருமகள் குலன - பெருந்தகைப் பெண்டிர் குழு. நிலன் உண்டு - நிலத்தை மெழுகி அதில் உணவையிட்டு உண்டு என்க. தவன்-தவப்பயன். நம் செல்வியைக் கருவுயிர்த்து எடுத்த என்க. குடி என்றது ஏசாச் சிற்ப்பின் இசை விளங்கும் இக்குடி என்பதுபட நின்றது.

5 - 9: நின்னையும்........................ மதனே

     (இ-ள்) அன்னவள் அருங்கற்பு - அம்மகளது பெறலருங் கற்புடைமை; நின்னையுங் கடந்தது - நின் கற்புடைமையினுங் காட்டில் மிகவும் மேம்பட்டது காண்; நலனவள் பொறை அக்கற்பு நலமுடைய அவளது பொறுமை; கடல் மூழ்கி அரிபெறும் அருள் பெற்ற நிலமகள் கடந்தது-கடலின் மூழ்கிப் பின்னர்த் திருமால் தோற்றுவித்தலால் அவனைக் கணவனாகப் பெறும் அருளைப்பெற்ற நிலமகள் பொறுமையினுங் காட்டில் மேம்பட்டது; வாய்மையின் மதன் அவளது வாய்மையின் மாண்பு; இருவினை நாடி உயிர்தொறும் அமைத்த ஊழையுங்