|
|
|
வறிவகன்
றுயர்ந்த கழன்மணி முடியு
முடைமையன் பொற்கழல் பேணி
யடையலர் போல வருண்மனந் திரிந்தே. |
(உரை)
கைகோள் : களவு தலைவன் கூற்று
துறை : பிரிவுணர்த்தல்
(இ-ம்.) இதற்கு,
முன்னிலை யாக்கல் (தொல், களவி. சு0) எனவரும் நூற்பாவின்கண் தெளிவு அகப்படுத்தல்
எனவரும் விதி கொள்க.
11
: எழுகதிர்...................திருந்திழை
(இ-ள்)
எழுகதிர் விரிக்கும் - குணகடலில் எழாநின்ற இளஞாயிறுபோல ஒளியைப் பரப்புகின்ற ;
மணிகெழு திருந்து இழை - மணிகள் பொருந்திய திருத்தஞ் செய்யப்பட்ட அணிகலன்களையுடைய
நங்கையே என்க.
1-6
: நிலை............................அடைத்தும்
(இ-ள்)
நிலையுடை பெருந்திரு நேர்படு காலை - நிலைநிற்றலையுடைய பெருஞ் செல்வமானது தானே வந்தெய்திய
காலத்தே ; காலால் தடுத்து - அதனைக் காலால் தள்ளி ; எதிர் கனன்று கறுத்தும் - அதற்கெதிராக
நெஞ்சழன்று வெகுண்டும் ; நனிநிறை செல்வ நாடும் . ஒழியாது நிரம்பிய வளப்பத்தைத்
தருகின்ற நாடும் ; நன்பொருளும் எதிர்பெறின் - நல்ல பொருள்களும் தாமே வந்து எதிர்ப்பட்ட
விடத்தே ; கண்சிவந்து எடுத்தும் அவை களைந்தும் - கண் சிவக்கும்படி சினந்தும் அவையிற்றை
எடுத்தெறிந்தும் ; தாமரை நிதியும் வால்வளை தளமும்பதுமநிதியும் வெள்ளிய சங்கநிதியும்
; இல்லம் புகுதலில் - தாமே வந்து வீட்டில் புகுமிடத்தே ; இருங்கதவு அடைத்தும் - அவை
புகுதாதபடி பெரிய கதவுகளை அடைத்துத் தடுத்து்ம் என்க,
(வி-ம்.)
நிலையாமையே இயல்பாயுள்ள செல்வத்தினும் மேலாய செல்வம் என்பான் நிலையுடைப் பெருந்திரு
என்றான். அதற்கு நேர்படுதல் அரிது என்பான் - நேர்படு காலை என்றான், நனிநிறைந்த
செல்வத்தையுடைய நாடு என்க. அஃதாவது நாடாவளத்தையுடைய நாடு, நன்பொருள் என்றது படை,
குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் என்பன. தாமரை நிதி - பதமநிதி. வளைத்தனம் - சங்கநிதி
|