|
7-10 : அரி....................................உளரேல்
(இ-ள்)
அரி அயன் அமரர் - திருமாலும் பிரமனும் தேவர்களும், மலைவடம் பூட்டி - மந்தரமலையாகிய
மத்தின்கண் வாசுகி என்னும் வடத்தைப் பூட்டி ; பெருங்கடல் வயிறு கிடங்கு எழ - பெரிய
கடலினது வயிறானது பள்ளமாகும்படி ; கடைந்த அமுதம் உள்கையில் உதவுழி ஊற்றியும் - கடைந்ததனாற்றிரணட்
அமிழ்தத்தை உள்ளங்கையில் கிடைக்கும் பொழுது அதனைத் தரையிற் கவிழ்த்தும் ; மெய்உலகு
இரண்டினுள் - மெய்மையுள்ள விண்ணுமாகிய இரண்டுலகத்தினும் ; செய்குநர் உளரேல் - செய்தார்
உண்டாயிருந்தால் என்க.
(வி-ம்.)
திருமால் முதலிய தேவர்கள் திருப்பாற் கடலில்கண் மந்தரமலையை மத்தாக நட்டு வாசுகியைக்
கடை கயிறாகக்கொண்டு அமுதம் கடைந்தனர் என்பத புராண வரலாறு. வயிறு . ஈண்டு உன்னிடம்,
கிடங்கு - பள்ளம், உள்கை - உள்ளங்கை, பெருந்திரு முதலியன தாமே வந்தெய்தும் பொழுது
அவற்றை வேண்டாமென விடுப்போர் மண்ணிலும் விண்ணிலும் இல்லை என்றவாறு,
13-17:
முழுதுற............................அகன்றிடலும்
(இ-ள்)
முழுதுஉற நிறைந்த பொருள் - உள்ளும் புறமுமாக எங்கும் நிறைந்துள்ள சிவமென்னும் பொருளை
; மனம் நிறுத்திமுன் வேடம் துறவா - தன் நெஞ்சின்கண்ணே நிலைபெற வைத்தும் தாம்
முன்பு தழுவிய சமண சமயத்திற்குரிய வேடத்தைக் கைவிடாத ; விதிஉடை சாக்கியன் - முறைமையையுடைய
சாக்கிய நாயனார் ; அருள்கரை காணா - திருவருள் என்னும் கரையைக் கண்டு ; அன்பு என்னும்
பெருங்கடல் - அன்பாகிய பெரிய கடலானது ; பலநாள் பெருகி - நெடுங்காலமாகப் பெருக்கெடுத்து
; ஒருநாள் உடைபட்டுக் கரைநிலை பெறாமல் கைகடந்து செயலற்றுப் போதலும் என்க.
(வி-ம்.)
முழுதுற நிறைந்த பொருள் என்றது அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்த இறைவனை முன்வேடம்
- சாக்கிய நாயனார் முன்னர்த் தழுவியிருந்த சமணத் துறவிவேடம், அஃதாவது தோமரு கடிஞையும்
சுவன்மேல் அறுவையும் கைப்பீலியும் பாயுடையும் உறியும் பிறவும் உடைய வேடம் என்க. காணா
. கண்டு. கையகன்றிடல் - எல்லை கடத்தல்.
18-25:
எடுத்தடை......................................கடலும்
(இ-ள்)
எடுத்து அடைகல் மலர் அவை தொடுத்துச் சாத்திய - பொறுக்கிச் சேர்த்து வைத்த கல்லாகிய
மலர்களைத் தொடர்ச்சியாக எறிந்து வழிபாடு செய்த ; இணையாப் பேரொளி
|