பக்கம் எண் :

மூலமும் உரையும்493



புல்லிய புல்லா துயங்குவள் கிடந்த கிழத்தியைக் குறுகிப் புல்கென முன்னிய நிறையழி பொழுதின் மெல்லென சீறடி புல்லிய விரவினும் என்னும் விதிகொள்க.

1 - 8 : நிரைவளை ..................................... பாங்கர்

     (இ-ள்) நிரைவளை யீட்டமும் - வரிசையான சங்குக் கூட்டமும் ; தரளக்குப்பையும்-முத்துக்குவியலும் ; அன்னக் குழுவும் - அன்னக் கூட்டங்களும் ; அணி குருகு இனமும் - அழகிய கொக்குக் கூட்டங்களும் ; கரும்கோட்டுப் புன்னை அரும்பு உதிர் கிடையும் - கரிய கிளைகளையுடைய புன்னையினது மலரினின்றும் பூந்துகள் உதிர்ந்து கிடக்கும் இடங்களும் ; முடவெண்தாழை ஊழ்த்த முள்மலரும் - முடம்பட்ட வெண்டாழையானது அரும்பிய முட்கள் பொருந்திய மலர்களும் ; அலவன் கவைகால் அன்ன வெள் அலகும் - நண்டினது பிளவுபட்ட கால்போன்ற வெள்ளைநிறமுடைய பலகறையும் ; வாலுகம் பரப்பி வலைவலிது ஒற்றினர்க்கு - மணன்மேட்டில் விரித்து வலையை வலிதாக ஈர்த்துக்கட்டின நெய்தல்நில மாக்களுக்கு ; ஈதுஎன அறியாது - இன்னதென்று அறியப்படாமல் ; ஒன்றி வெள்ளிடையாம் - வரம்பின்றி ஒன்றுபட்டு வெளியிடமாகிய ; மாதுஉடை கழிக்கரை - அழகுடைய உப்பங்கழியினது கரையின்கண்ணுள்ள ; சேரி ஓர் பாங்கர் - பாதவர் சேரியின் ஒரு பக்கத்திலே என்க.

     (வி-ம்.) வளை - சங்கு. குப்பை - குவியல், குருகு - கொக்கு ; நாரையுமாம், கோடு - கிளை, கிடை - இடம் தாழை முடம்பட்டிருத்தல் இயல்பு. அலவன் - நண்டு, கவைக்கால் - பிளவுபட்ட கால், அலகு - பலகறை ; அஃதாவது, கவடி. வாலுகம் - மணல்மேடு, ஒற்றினர்க்கு ; வினையாலணையும் பெயர், ஒன்றுதல் - வரம்பின்றி ஒன்றுபட்டிருத்தல், மாது - அழகு, கழி - நெய்தல்நில நீரோடை சேரி - பரதவர்சேரி. வளையீட்டம் முதலியன ஒன்றிக் கழிக்கரையிலுள்ள சேரி என இயைக்க.

9-12: புன்னொடு ...................................... அறிகுவனேல்

     (இ-ள்) புள்ளொடு பிணங்கும் புள் கவராது - சேவற் பறவைகளோட ஊடுகின்ற பெடைப் பறவைகள் கவர்ந்து செல்லாதபடி ; வெள்நிற உணங்கல் காவலாக - வெண்ணிறமுடைய இறாமீனினது உணங்கலுக்குக் காவலாக இருப்பவள் போல ; உலகு உயிர் கவரும் கொடுநிலைக்கூற்றம் - உலகத்திலுள்ள உயிர்களைக் கவர்ந்து செல்கின்ற கொடுங்குணமுடைய கூற்றுவனே ; மகள்எனத் தரித்த நிலை அறிகுவனேல் - பெண்ணென்று கண்டோர் கருதும்படி வேடம் பூண்டு நின்ற நிலைமையை யான் முன்பே அறிந்திருப்பேனாயின் என்க,