|
30
|
|
மயில்சிறை
யால வலிமுகம் பனிப்ப
வெதிர்கனைக் குவளை மலர்ப்புறம் பறித்து
வரையுட னிறைய மாலையிட் டாங்கு
நெடுமுடி யருவி யகிலொடு கொழிக்குங்
கைலைவீற் றிருந்த கண்ணுதல் விண்ணவ |
|
|
|
னாடகக்
கடவுள் கூட னாயகன்
நிறையுளந் தரித்தவர் போலக்
குறையுள நிங்கி யி்ன்பா குவனே |
(உரை)
கைகோள் : களவு. தலைவி கூற்று
துறை : பங்கயத்தோடு
பரிவுற்றுரைத்தல்
(இ-ம்.)
இதற்கு, மறைந்தவர்க் காண்டல் (தொல் களவி. 20) எனவரும் நூற்பாவின்கண் பிரிந்தவழிக்
கலங்கினும் எனவரும் விதிகொள்க.
1-4:
சிலை...................................ஒருவேற்கு
(இ-ள்)
சிலைநுதல் கணைவிழி தெரிவையர் உளம் என - வில்லை ஒத்த நெற்றியையும் அம்பையொத்த
கண்களையுடைய மகளிர் நெஞ்சம்போல ; ஆழ்ந்து அகன்று இருண்ட நிறைநீர் கயத்துள் -
ஆழமுடைத்தாய்ப் பரவிக்கறுத்த நிறைந்த நீரையுடைய வாவியின் கண் ; எரி விரிந்தன்ன
பல இதழ்தாமரை - தீ விரிந்தாற் போன்ற பலவாகிய இதழ்களையுடைய தாமரை மலரே கேள்
!; நெடுமயல் போர்த்த உடல் ஒருவேற்கு - மிக்க மயக்கத்தால் மூடப்பட்ட உடம்பினையுடைய
ஒருத்தியாகிய எனக்கு என்க.
(வி-ம்.)
நுதல் - நெற்றி, இதனை ஆகுபெயராகக் கொண்டு புருவம் எனினும் அமையும். கனை - அம்பு
; தெரிவையர் என்பது ஈண்டுப் பருவப் பெயராகாது மகளிர் என்னும் பொருள் குறித்து நின்றது
வாவிக்குத் தெரிவையர் உளம் உவமை. எரி - நெருப்பு இது தாமரை மலருக்குவமை, மயல் -
மயக்கம் உடம்பெலாம் பசலை பாய்ந்திருத்தலின் மயல்போர்த்த உடல் என்றாள். ஒருவேன்
என்றது களைகணில்லாத தமியளாகிய ஒருத்தி என்பதுபட நின்றது. தாமரை : விளி
5-23:
குருமணி......................................உதவினையாயின்
(இ-ள்) குருமணி
கொழிக்கும் புனல்மலைக் கோட்டுழி - ஒளிமிக்க மாணிக்கமணிகளை ஒதுக்குகின்ற அருவிநீரையுடைய
|