பக்கம் எண் :

498கல்லாடம்[செய்யுள்68]



30
  மயில்சிறை யால வலிமுகம் பனிப்ப
வெதிர்கனைக் குவளை மலர்ப்புறம் பறித்து
வரையுட னிறைய மாலையிட் டாங்கு
நெடுமுடி யருவி யகிலொடு கொழிக்குங்
கைலைவீற் றிருந்த கண்ணுதல் விண்ணவ
  னாடகக் கடவுள் கூட னாயகன்
நிறையுளந் தரித்தவர் போலக்
குறையுள நிங்கி யி்ன்பா குவனே

(உரை)
கைகோள் : களவு. தலைவி கூற்று

துறை : பங்கயத்தோடு பரிவுற்றுரைத்தல்

     (இ-ம்.) இதற்கு, “மறைந்தவர்க் காண்டல்” (தொல் களவி. 20) எனவரும் நூற்பாவின்கண் ‘பிரிந்தவழிக் கலங்கினும்’ எனவரும் விதிகொள்க.

1-4: சிலை...................................ஒருவேற்கு

     (இ-ள்) சிலைநுதல் கணைவிழி தெரிவையர் உளம் என - வில்லை ஒத்த நெற்றியையும் அம்பையொத்த கண்களையுடைய மகளிர் நெஞ்சம்போல ; ஆழ்ந்து அகன்று இருண்ட நிறைநீர் கயத்துள் - ஆழமுடைத்தாய்ப் பரவிக்கறுத்த நிறைந்த நீரையுடைய வாவியின் கண் ; எரி விரிந்தன்ன பல இதழ்தாமரை - தீ விரிந்தாற் போன்ற பலவாகிய இதழ்களையுடைய தாமரை மலரே கேள் !; நெடுமயல் போர்த்த உடல் ஒருவேற்கு - மிக்க மயக்கத்தால் மூடப்பட்ட உடம்பினையுடைய ஒருத்தியாகிய எனக்கு என்க.

     (வி-ம்.) நுதல் - நெற்றி, இதனை ஆகுபெயராகக் கொண்டு புருவம் எனினும் அமையும். கனை - அம்பு ; தெரிவையர் என்பது ஈண்டுப் பருவப் பெயராகாது மகளிர் என்னும் பொருள் குறித்து நின்றது வாவிக்குத் தெரிவையர் உளம் உவமை. எரி - நெருப்பு இது தாமரை மலருக்குவமை, மயல் - மயக்கம் உடம்பெலாம் பசலை பாய்ந்திருத்தலின் மயல்போர்த்த உடல் என்றாள். ஒருவேன் என்றது களைகணில்லாத தமியளாகிய ஒருத்தி என்பதுபட நின்றது. தாமரை : விளி

5-23: குருமணி......................................உதவினையாயின்

     (இ-ள்) குருமணி கொழிக்கும் புனல்மலைக் கோட்டுழி - ஒளிமிக்க மாணிக்கமணிகளை ஒதுக்குகின்ற அருவிநீரையுடைய