பக்கம் எண் :

மூலமும் உரையும்523



30
  விண்டொட வெழுந்து விழுந்திரைக் குழுவினை
யரிவினைக் கடங்கிய மலையினம் வரவெனக்
  குளிர்மணற் கேணியுட் கொம்பினர் படர்ந்து
முயங்கிய வுள்ளம் போகி
மயங்கிய துறையின மொருங்குழி வளர்ந்தே.

(உரை)
கைகோள் : களவு. தோழிகூற்று

துறை: வாய்மைகூறி வருத்தந்தணித்தல்.

     (இ-ம்.) இதனை, “நாற்றமுந் தோற்றமும்” (தொல்.களவி-23) என வரும் நூற்பாவின்கண் ‘ஆங்கு அதன் தன்மையின் வன்புறை உளப்பட என்பதன்கண் அமைத்துக்கொள்க.

1-4: திருமலர்..............................மான

     (இ-ள்) திருமலர் இருந்த முதியவன் போல - தாமரைப் பூவில வீற்றிருந்த யாவர்க்கும் மூத்தோனாகிய பிரமனைப்போல; நால்முகம் கொண்டு அறி நன்னர் நெஞ்சு இருந்து - நான்கு முகங்களைக்கொண்டு அறிவனவற்றையெல்லாம் அறிந்த நல்ல உள்ளத்திலே உறைந்து; வேறு அருள் பிறவி தோற்றுவித்து எடுத்து-வேறாகிய அருளுக்குரிய பிறப்பினைப் பிறப்பித்துக் காட்டி; நில்ம் இரண்டு அளந்த- நிலவுலகும் வானுலகும் ஆகிய இரண்டனையும் திருவடியால் அள்நத ; நெடுமுகில் மான - ஒருகால் விளர்த்தலும் ஒருகால் கறுத்தலும் இல்லாத பெரிய முகிலாகிய திருமால்போல என்க.

     (வி-ம்.) திருமலர் - ஈண்டுச் சிறப்பால் தாமரை மலரைக் குறித்து நின்றது. அறி நெஞ்சு - அறிவனவற்றையெல்லாம் அறிந்த நெஞ்சு. நிலம் இரண்டு- மண்ணும் விண்ணுமாகிய இரண்டு உலகங்கள். இரண்டும் எனல்வேண்டிய முற்றும்மை செய்யுள் விகாரத்தால் தொக்கது. நெடுமுகில் என்றமையால் ஒருகால் விளர்த்தலும் ஒருகால் கறுத்தலும் இல்லாத பெரிய முகில் என்று உரைக்கலாயிற்று, முகில்: ஆகுபெயர்.

5-11: அரக்கர்.........................................பெருநகர்

     (இ-ள்) அரக்கர் தம் கூட்டம் தொலைத்து - அரக்கருடைய குலத்தை அழித்து ; நெய் உண்டு - நெய்யை உண்டு ; களிறு உரிபுனைந்த கண்ணுதல் கடுப்ப - யானைத் தோலைப்போர்த்த சிவபெருமான்போல; வில் எடுத்து ஒன்னலர் புரம் எரி ஊட்டி-பகைவருடைய முப்புரங்களையும் எரித்து ; இனைய- இத்தன்மையதாக ; எவ்வுலகும் தொழுது எழு திருவேல் - எல்லா உலகமும்