பக்கம் எண் :

மூலமும் உரையும்529



  மற்றவ டரநெடுங் கற்பே
யுற்றிவன் பெற்றா ளேன்பதுந் தகுமே

(உரை)
கைகோள் : கற்பு. தோழி கூற்று

துறை: அயலறிவுரைத்தவ ளழுக்கமெய்தல்

     (இ-ம்.) இதனை, “பெறற்கரும் பெரும் பொருள்” (தொல். கற்பி. 9) எனவரும் நூற்பாவின்கண் ‘பிறவும் வகைபட வந்தகிளவி ’ என்பதனால் முடித்துக்கொள்க.

     குறிப்பு:- இச் செய்யுளுக்கு எடுத்துக்காட்டாக வந்த திருக்கோவையார் செய்யுள் தலைவி கூற்றாகவும், இது தோழி கூற்றாகவும் அமைந்திருத்தல் காண்க.

1-6: ஆடகம்...............................மேனியன்

     (இ-ள்) ஆடகம் சயிலத்து ஓர் உடல் பற்றி கலிதிரை பரவையும் கனன்று எழுவடவையும் - பொன்மலையினது ஒப்பற்ற உடலைப்பற்றி ஆரவாரியாநின்ற அலைகளையுடைய கடலும் எரிந்தெழாநின்ற வடவைத்தீயும்; அடியிலும் நடுவிலும் அணைந்தன போல-அம்மலையினது அடிப்பகுதியிலும் நடுப்பகுதியிலும் பொருந்தியிருந்தன போல ; பசுந்தழை தோகையும்-பசிய தழைத்த தோகையினையுடைய மயிலும் - செஞ்சிறைச் சேவலும் - சிவந்த சிறகினையுடைய கோழிச்சேவலும் ; தாங்கியும் மலர்க்கரம் தங்கியு்ம் - முறையே சுமந்தும் தாமரைமலர் போன்ற கையின்கண் தங்கியும் ; நிலைத்த பேரொளி மேனியன்-நிலைபெற்றுள்ள மிக்க ஒளியையுடைய திருமேனியை உடையவனும் என்க.

     (வி-ம்.) ஆடகச்சயிலம் - பொன்மலை, இது முருகப்பெருமானுக்குவமை. கவிதிரை பரவை - ஆரவாரிக்கும் அலைகளையுடைய கடல், இஃது அவன் ஊர்தியாகிய மயிலுக்குவமை. வடவை - வடவைத் தீ. இஃது அவன் கையிலேந்திய கொடியின் கண்ணதாகிய கோழிச் சேவலுக்குவமை. பொன்மலையின் கீழிருந்து அலைகடல் அதனைத் தாங்கினாற் போலவும் மயிலால் சுமக்கப்பட்டு ஒருகையில் சேவற் கொடியை யுயர்த்ள்ள பேரொளி மேனியனாகிய முருகப்பெருமான் தோன்றுவான் என்பது கருத்து. பசுந்தழைத்தோகை எனும் பன்மொழித்தொடர் மயில் என்னும் பொருட்டு, சேவல் சிவந்த சிறகினையுடைமையின் வடவைத்தீ உவமையாயிற்று.

6-13: பாருயிர்.............................என

     (இ-ள்) பார் உயிர்க்கு ஓர் உயிர் - உலகின்கணுள்ள உயிரினங்களுக் கெல்லாம் ஒரே உயிராக அமைந்தவனும்;