பக்கம் எண் :

மூலமும் உரையும்537



ஈனுதற்கிடனான ; பழனம் கூடல் - கழனிகளையுடைய மதுரையினிடத்தே என்க.

     (வி-ம்.) முழுமதி - முழுத்திங்கள், உடுக்கணம் - விண்மீன் கூட்டம், உமிழ்கின்றன - உமிழப்படுகின்றன. தரளம் - முத்து, (கஅ) நிரைவளை எழில்மதி காட்டி முகடேறித் தரளம் சொரியும் கூடல் என முடித்துக்கொள்க.

24-25: குவளைப்............................முகிழ்ப்ப

     (இ-ள்) குவளை நின்று அலர்ந்த - குவளைமலர் தங்கி விரிந்தாலொத்த; மறைஎழு குரலோன் - வேதம் பிறத்தற்கு இடமாகிய மிடற்றினையுடைய சிவபெருமான் ; இமையவர் வேண்ட - தேவர் வேண்டுதலால் ; ஒரு நகை முகிழ்ப்ப-ஒரு புன்முறுவல் தோற்றுவிப்ப என்க.

     (வி-ம்.) குவளைமலர் இறைவனுடைய மிடற்றில் அமைந்த கறைக்கு உவமை. குரல்-மிடறு. ஒரு நகை என்றது சினத்தாற்றோன்றிய புன்முறுவலை.

26-29: ஓருழி........................................மதிலே

     (இ-ள்) ஓருழி கூடாது - ஓரிடத்தே பொருந்தியிராமல ; உம்பரின் படர்ந்து- வானத்திலே யாண்டும் இயங்கி ; வான் உடைந்து உண்ணும் மறக்கொலை அரக்கர் -தேவர்களை அழித்துக் கொள்ளைகொண்டுண்ணுகின்ற கொடிய கொலைத்தொழிலை யுடைய அரக்கர்களுடைய ; முப்பெருமதில் பெற்றன அன்றோ - மூன்றாகிய பெரிய மதில்கள் பட்டபாடுபடும் அல்லவோ, முன் அந்நெருப்புக்கெதிரே ; மருவலர் அடைந்த-பகைவரால் அடைக்கப்பட்ட; மறம் கெழுமதில்- வலிமைபொருந்திய மதில்கள் என்க.

     (வி-ம்.) (5-6) செருப்படைவேந்தர் முனைமேல் படர்ந்த நங்காதல் முனைப்படைகனன்று உடற்று எரியால் (26) மருவலர் அடைந்த மதில் (24) குரலோன் நகைமுகிழ்ப்ப (25) அரக்கர் முப்பெருமதில் (27-28) பெற்றன அன்றோ என இயையும். ஓருழி - ஓரிடம் வான் : ஆகுபெயர், முப்பெருமதில் - திரிபுரம். மருவலர் - பகைவர் நந்தலைவர் வினைமுற்றிக் கடிதில்மீன்வர் என்பதுபட மருவலர்மதில் முப்புரங்கள் பட்டபாடுபடும் என்றாள்.

     இதனை, மடந்தையே ! முனைமேற் படர்ந்த காதலரது படையுடற்று மெரியால் எதிரே மருவலரடைந்த மறங்கெழு மதிலானது கூடல் மறையெழு குரலோன் ஒருநகை முகிழ்ப்ப அரக்கர் மும்மதில் பெற்றபடியாகுமன்றோவென வினைமுடிவு செய்க. மெய்ப்பாடும் பயனும் அவை.