|
(உரை)
கைகோள் : கற்பு. தோழி கூற்று
துறை: கலக்கங்கண்டுரைத்தல்
(இ-ம்.)
இதனை பெறற்கரும் பெரும் பொருள் (தொல். கற்பி. க) எனவரும் நூற்பாவின்கண் பிறவும்
வகைபடவந்த கிளவி, என்பதனால் அமைத்துக்கொள்க.
30:
இவட்கு...................................
(இ-ள்)
இவட்கு - எம்பெருமாட்டியாகிய இவளுக்கு என்க.
(வி-ம்.)
இவள் என்றது எம்பெருமாட்டியாகிய இவளுக்கு என்பதுபடநின்றது.
1-3:
பெருந்துயர்...............................சாற்ற
(இ-ள்)
பெருந்துயர் அகற்றி - மாந்தரின் உளத்தில் உறையும் பெரிய துன்பத்தை நீக்கி ; அறம்
குடிநாட்டி - அறப்பண்பினை நெஞ்சின்கண் குடியாக இருத்தி ; உளச்சுருள் விரிக்கும் -
நெஞ்சின் சுருக்கத்தை மலர்வியாநின்ற ; நலத்தகு கல்வி ஒன்று உளது - நலஞ் செய்யும்
தகுதியையுடைய ; கல்வி என்னும் பொருள் ஒன்று உளது ; என குரிசில் ஒரு மொழி சாற்ற
- என்று நம்பெருமான் சொன்ன ஒரு மொழியை யான் சொல்லுமளவிலே என்க.
(வி-ம்.)
ஒதற்குப் பிரியக்கருதும் தலைவன் அக்கருத்தினை மெல்ல வெளிப்படுப்பான் தோழியை நோக்கி
மாந்தர் தேடுதற்குரிய பொருள் ஒன்று உளது ; என குரிசில் ஒரு மொழி சாற்ற - என்று
நம்பெருமான் சொன்ன ஒரு மொழியை யான் சொல்லுமளவிலே என்க.
(வி-ம்.)
ஓதற்குப் பிரியக்கருதும் தலைவன் அக்கருத்தினை மெல்ல வெளிப்படுப்பான் தோழியை நோக்கி
மாந்தர் தேடுதற்குரிய பொருள் ஒன்று உளது ; அது துயரகற்றும் ; அறத்தை நெஞ்சில் நாட்டும்
. உளச்சுருள் விரிக்கும் . என்று கூறினானாக, அக்குறிப்புணர்ந்த தோழி அவன் கூற்றினைத்
தலைவிக்குக் கூறுகின்றான் என்க. இதனோடு
அறம்பொரு ளின்பமும்
வீடும் பயக்கும்
புறங்கடை நல்லிசையு நாட்டும் - உறுங்கவலொன்
றுற்றுழியுங் கைகொடுக்குங் கல்வியி னூங்கில்லை
சிற்றுயிர்க் குற்ற துணை (நீதிநெறி.
உ. கல்வி) |
எனவரும் வெண்பாவையும்
நினைக. குரிசில் - தலைவன்.
4-8:
பேழ்வாய்............................கவிந்து
(இ-ள்)
பேழ்வாய் கொய்யுளை அரி சுமந்து எடுத்த - பெரிய வாயையும் கொய்தாலொத்த பிடரிமயிரினையுமுடைய
சிங்கத்தினாலே சுமந்து தாங்கப்பட்ட ; பல்மணி ஆசனத்து இருந்து - பலவாகிய மணிகள்
பதித்த இருக்கையில் எழுந்தருளி
|