பக்கம் எண் :

582கல்லாடம்[செய்யுள்82]



35
  வின்பப் பசுங்கொடி யிடப்பாற் படர
வெள்ளியங் குன்றம் விளங்கவீற் றிருந்த
முன்னவன் கூடன் முறைவணங் காரென
40
  வரவப் பசுந்தலை யரும்பவிழ் கணைக்கா
னெய்தற் பாசடை நெடுங்காட் டொளிக்குங்
கண்ணெனக் குறித்த கருங்கயற் கணத்தை
வெள்ளுடற் கூர்வாய்ச் செந்தாட் குருகின
மரவெயி றணைத்தமுள் ளிலைமுடக் கைதைகள்
45
  கான்றலர் கடிமலர்க் கரந்துறைந் துண்ணுங்
கருங்கழி கிடந்த கானலங் கரைவாய்
மெய்படு கடுஞ்சுள் மின்னெனத் துறந்தவர்
சுவலுளைக் கவனப் புள்ளியற் கலிமா
னோக்க மறைத்த பரிதிகொ ணெடுந்தேர்ப்
50
  பின்னொடு சென்றவென் பெரும்பீழை நெஞ்சஞ்
சென்றுழிச் சென்றுழிச் சேறலு முளவோ
வவ்வினைப்பயனுழி யருந்தவம் பெறுமோ
விடைவழி நீங்கியென் னெதிருறுங் கொல்லோ
வன்றியு நெடுநா ளமைந்துடன் வருமோ
  யாதென நினைக்கிலன் மாதோ
பேதை கொள்ளா தொழிமனங் கடுத்தே.

(உரை)
கைகோள்: களவு. தலைவிகூற்று.

துறை: நெஞ்சொடு வருந்தல்.

     (இ-ம்) இதற்கு, “வரைவிடைவைத்த காலத்து வருத்தினும்” (தொல். களவி. 21) எனவரும் விதிகொள்க.

1-7: வடமொழி...........................கதுவே

     (இ-ள்) வடமொழி விதித்த இசை நூல் வழக்குடன்-வடமொழியின்கண் வகுக்கப்பட்ட இசைநூல் முறைப்படி; அடுத்தன எண் நான்கு அங்குலி அகத்தினும் நாற்பதிற்று இரட்டி நூல் அங்குலியினும்-பொருந்தியனவாகிய முப்பத்திரண்டு விரல் அளவினும் எண்பத்து நான்கு விரல் அளவினும்; குறுமையும் நெடுமையும் கோடல் பெற்று ஐதாய்-முறையே குறுக்கமும் நீட்சியும் கொள்ளுதலை யுடைத்தாய் அழகுடையதாய்; ஆயிரம் தந்திரி நிறைபொது விசித்து-