பக்கம் எண் :

மூலமும் உரையும்609



35
  நிறைபொரு ளழுந்த வருளினக் கூட்ட
மிருட்பவ நடுங்க வெனுங்குண மெட்டுந்
தமக்கும் படைக்க விதிப்பேற் றடியவர்
    நிலையருட் கற்பென நெடுங்கற் புடையோண்
முன்னுறின் வண்மன மாங்கே
நன்னரிற் கொண்டு குளிரும் பெறுமே.

(உரை)
கைகோள் : கற்பு தோழிகூற்று

துறை : தோழி யியற்பழித்தல்.

     (இ-ம்.) இதற்கு, “பெறற்கரும் பெரும் பொருள்” (தொல். கற்பி. கூ) எனவரும் நூற்பாவின்கண் ‘பிழைத்து வந்து இருந்த கிழவனை நெருங்கி இழைத்து ஆங்கு ஆக்கிக் கொடுத்தற்கண்ணும், எனவரும் விதிகொள்க. (குறிப்பு:- இதற்கும் இதற்கெடுத்துக் காட்டிய திருக்கோவையார்ச் செய்யுளுக்கும் துறை வேறுபாடுண்மை உணர்க.)

1 - 6: பாசடை..............................நீயும்

     (இ-ள்) பாசடைக் கருங்கழி படர்மணல் உலகமும் - பசிய இலைகளால் மூடப்பெற்ற கரிய கழிகளையுடைய பரந்த பெருமணலுலகமாகிய நெய்தனிலந்தானும் குறிஞ்சி நிலத்தைப் போல; எழுமலை பொடித்தவற்கு இசைதல் வேண்டி - ஏழு மலைகளை நீறாக்கிய முருகக் கடவுளுக்குப் பொருந்துதலை விரும்பி; வரை உலகு அனைத்தும் வருவது போல குறிஞ்சி நிலத்திலுள்ள எல்லா மலைகளும் நிலைபெயர்ந்து வருமாறு போலே; திரை நிரை திரைத்துக் கரைகரைக் கொல்லும் - அலைகளை நிரல் நிரலாகச் சுருத்டி வந்து கரையைக் கரைத்தழிகின்றி; வையை நீர் விழவு புகுந்தனம் - வையைப் பேரியாற்றில் வரும் புதுநீர் விழாவிற்குச் சென்று வந்தோம்; என ஒரு பொய்யினாள் அன்றி. விழவிற்குச் சென்று வந்தோம்; என ஒரு பொய்யினள் அன்றி - என்று ஒரு பொய் கூறும் நின்பரத்தை போலல்லாமல்; மெய்யினை நீயும் - மெய்யே பேசும் இயல்புடைய நீ தானும் என்க.

     (வி-ம்.) குறிஞ்சி நிலத்திலுள்ள மலைகளெல்லாம் நெய்தல் நிலத்தையும் முருகன் உறைதற்குத் தகுதியாக்கக் கருதி நிலைபெயர்ந்து புரண்டு வருவதுபோல இருந்தது வையையாற்றிற் புரளும் அலை என்றவாறு, பாசடை - பச்சிலை, மணலுலகம் - நெய்தனிலம், “வருணன் மேய பெருமண லுலகமும்” என்பது தொல்காப்பியம். மலைபொடித்தவன் - முருகக்கடவுள். வரையுலகு - குறிஞ்சி நிலம். வரையுலகிலுள்ள வரையனைத்தும் என்க. கரைக்கொல்லும் - கரைத்துக் கொல்லும். வையையின்கண் புதுநீர் வரும் பொழுது நீர் விழாக் கொண்