|
35
|
|
நிறைபொரு
ளழுந்த வருளினக் கூட்ட
மிருட்பவ நடுங்க வெனுங்குண மெட்டுந்
தமக்கும் படைக்க விதிப்பேற் றடியவர் |
| |
|
நிலையருட்
கற்பென நெடுங்கற் புடையோண்
முன்னுறின் வண்மன மாங்கே
நன்னரிற் கொண்டு குளிரும் பெறுமே. |
(உரை)
கைகோள் : கற்பு தோழிகூற்று
துறை : தோழி
யியற்பழித்தல்.
(இ-ம்.)
இதற்கு, பெறற்கரும் பெரும் பொருள் (தொல். கற்பி. கூ) எனவரும் நூற்பாவின்கண்
பிழைத்து வந்து இருந்த கிழவனை நெருங்கி இழைத்து ஆங்கு ஆக்கிக் கொடுத்தற்கண்ணும்,
எனவரும் விதிகொள்க. (குறிப்பு:- இதற்கும் இதற்கெடுத்துக் காட்டிய திருக்கோவையார்ச்
செய்யுளுக்கும் துறை வேறுபாடுண்மை உணர்க.)
1
- 6: பாசடை..............................நீயும்
(இ-ள்)
பாசடைக் கருங்கழி படர்மணல் உலகமும் - பசிய இலைகளால் மூடப்பெற்ற கரிய கழிகளையுடைய
பரந்த பெருமணலுலகமாகிய நெய்தனிலந்தானும் குறிஞ்சி நிலத்தைப் போல; எழுமலை பொடித்தவற்கு
இசைதல் வேண்டி - ஏழு மலைகளை நீறாக்கிய முருகக் கடவுளுக்குப் பொருந்துதலை விரும்பி;
வரை உலகு அனைத்தும் வருவது போல குறிஞ்சி நிலத்திலுள்ள எல்லா மலைகளும் நிலைபெயர்ந்து
வருமாறு போலே; திரை நிரை திரைத்துக் கரைகரைக் கொல்லும் - அலைகளை நிரல் நிரலாகச்
சுருத்டி வந்து கரையைக் கரைத்தழிகின்றி; வையை நீர் விழவு புகுந்தனம் - வையைப் பேரியாற்றில்
வரும் புதுநீர் விழாவிற்குச் சென்று வந்தோம்; என ஒரு பொய்யினாள் அன்றி. விழவிற்குச்
சென்று வந்தோம்; என ஒரு பொய்யினள் அன்றி - என்று ஒரு பொய் கூறும் நின்பரத்தை
போலல்லாமல்; மெய்யினை நீயும் - மெய்யே பேசும் இயல்புடைய நீ தானும் என்க.
(வி-ம்.)
குறிஞ்சி நிலத்திலுள்ள மலைகளெல்லாம் நெய்தல் நிலத்தையும் முருகன் உறைதற்குத் தகுதியாக்கக்
கருதி நிலைபெயர்ந்து புரண்டு வருவதுபோல இருந்தது வையையாற்றிற் புரளும் அலை என்றவாறு,
பாசடை - பச்சிலை, மணலுலகம் - நெய்தனிலம், வருணன் மேய பெருமண லுலகமும் என்பது
தொல்காப்பியம். மலைபொடித்தவன் - முருகக்கடவுள். வரையுலகு - குறிஞ்சி நிலம். வரையுலகிலுள்ள
வரையனைத்தும் என்க. கரைக்கொல்லும் - கரைத்துக் கொல்லும். வையையின்கண் புதுநீர்
வரும் பொழுது நீர் விழாக் கொண்
|