|
35
|
|
முத்தொழி
லிற்றன் முதற்றொழி லாக்கி
யொருதாட் டாரைகொண் முக்கவைச் சுடர்வேற்
றலையிருந் தருங்கதி முழுதுநன் றளிக்குந் |
|
40
|
|
திருநகர்க்
காசிப் பதியகத் தென்றும்
வெளியுறத் தோன்றிய விருண்மணி மிடந்றோ
னேமியங் குன்றகழ் நெடுவேற் காளையன்
றன்பரங் குன்றத் தமர்பெறு கூடற்
கிறையோன் றிருவடி நிறையுடன் வணங்கும் |
| |
|
பெரும்புன
லூர வெம்மில்ல
மரும்புனல் வையைப் புதுநீ ரன்றே. |
(உரை)
கைகோள் : கற்பு. தலைவிகூற்று
துறை : புனலாட்டுவித்தமை
கூறிப்புலத்தல்.
(இ-ம்.)
இதற்கு, அவன் அறிவு ஆற்ற அறியுமாகலின் (தொல்.கற்பி. 6) எனவரும் நூற்பாவின்கண்,
புகன்ற வுள்ளமொடு
புதுவோர் சாயற்
ககன்ற கிழவனைப் புலம்புநனி காட்டி
யியன்ற நெஞ்சந் தலைப்பெயத் தருக்கி
யெதிர்பெய்து மறுத்த வீரத்து மருங்கினும் |
எனவரும் விதிகொள்க.
19
- 23: கவைநா......................................காலை
(இ-ள்)
கவைநா கட்செவி - தாருகவனத்து இருடிகளால் விடப்பட்ட பிளவுபட்ட நாவையுடைய பாம்பானது;
அணந்து இரை துய்த்த - வாய்திறந்து இரையாகப் பற்றியுண்ட; பாசுடல் பகுவாய பகுவாய்
பீழை அம் தவளையும் பச்சை உடலையும் பிறந்த வாயையும் சாதற்றுன்பத்தையும் உடைந்தாகிய
தவளையும்; பேழ்வாய் தழல்விழி தரக்கு அடித்து அவிந்த - பெரிய வாயையும் சினத்தீக்
காலும் கண்களையுமுடைய புலி தாக்குதலாலே இறந்துபட்ட; நிலம்படர் தோகை குலம்கொள்
சேதாவும் - நிலத்திலே தோய்கின்ற வாலையும் உயர்ந்த பிறப்பினையுமூடைய செந்நிறமுடைய
ஆவும்; அவ்வுழி அரைமாத்திரை எழு காலை - அங்ஙனம் அவை பட்டவிடத்தே அரை நொடியில்
அவை உயிர் பெற்றெழுந்த காலத்தில் என்க.
(வி-ம்.)
கவைநா - இரட்டையாகிய நாக்கு, கட்செவி - பாம்பு; அன்மொழித்தொகை, கண்ணையே செவியாகவும்
உடையது என்க.
|