|
ஒளியுள்ள மணிகளைக்
கொழிக்கின்ற செவ்வேள் எழுந்தருளியுள்ள திருப்பரங்குன்றத்தைத் தன் பாற் கொண்டுள்ள;
திருப்பெறு கூடல்-தெய்வத்தன்மை பெற்ற மதுரையின்கண் எழுந்தருளியுள்ள; கொழுஞ்சுடர்
கிளைத்த நெடுஞ்சடைப் புயங்கன்-கொழுவிய தீயானது கொழுந்து விட்டாற்போன்ற நெடிய
சடையையுடைய சிவபெருமானது; பவளம் தழைத்த பதமலர் சுமந்த-பவளநிறமுள்ள திருவடிமலர்களைத்
தலைமேற் கொண்ட; நம் பொருபுனல் ஊரனை-நம்முடைய கரையை மோதுகின்ற நீரையுடைய ஊரையுடைய
தலைவனை; பொது என அமைத்த- யாவர்க்கும் பொதுவாக அமைக்கப்பட்ட; கடி குடி அ மனையவர்
மனைபுகுத்தி-சான்றோரால் விலக்கப்பட்ட குடிவாழ்க்கையையுடைய அப்பரத்தை மகளிருடைய
வீட்டிலே சேர்த்துப் பின்னர்; அறுவாய் நிறைந்த மதிப்புறத்தோ என சுரைதலை கிடைத்த-அரியப்பட்ட
தன்னுடைய ஒரு நுனி முழுத் திங்களிடத்து அமைந்துள்ளதோ என்று கருதும்படி சுரைக்குடுவையைத்
தலையிலே தாங்கப்பெற்ற; இசையுளர் தண்டு எடுத்து-இசை நரம்புகளைத் தடவுகின்ற யாழைக்
கையிலெடுத்து என்க.
(வி-ம்.)
உடைதிரை: வினைத்தொகை. சேயோன்-முருகப்பெருமான். குன்று-திருப்பரங்குன்றம். சுடர்-தீ.
சுடர் கிளைத்தாற் போன்ற சடை என்க. பொருபுனல்-கரையை மோதுகின்ற நீர். ஊரன்-தலைவங்
கடிகுடி-விலக்கப்பட்ட குடிவாழ்க்கை. கடிகுடி அம் மனையர் என்றது பரத்தையரை. அறுவாய்-அரியப்பட்ட
இடம். சுரைக்குடுவையில் பொருந்தியிருக்கும் யாழ்த்தண்டின் நுனி முழுத்திங்களைப் பொருந்தியிருத்தல்
போலத் தோன்றுகின்றது என்பது கருத்து. சுரை-சுரைக்குடுவை. தண்டு: ஆகுபெயர்; யாழ்.
1
- 2: வாய்............................கொட்புற்று
(இ-ள்)
வாய் வலம் கொண்ட-வாயாற் பாடும் வன்மை கொண்டதால்; வயிற்று எழு தழலுக்கு ஆற்றாது-வயிற்றில்
மூளுகின்ற நெருப்பினைத் தாங்கமாட்டாமல்; அலைந்து காற்று எனக் கொட்புற்று-யாண்டும்
அலைந்து காற்றைப் போலச் சுழன்று என்க.
(வி-ம்.)
வயிற்றில் தழல் எழுதற்கு வாயாற்பாடுதல் காரணமாகலின் வாய்வலம் கொண்ட தழலுக்கு
என்றாள். தழல் என்றது ஈண்டுப் பசிப்பிணியை. கொட்புறுதல்-சுழலுதல்.
11
- 15: அளி..........................பாணற்கு
(இ-ள்)
அளிதார் பாடும்-வண்டு பூவிற் பாடுவது போலப் பாடுகின்ற; குரல் நீர் வறந்த-தொண்டை
நீர் வற்றிய; மலைப்புள் போல நிலை குரல் அணந்து-மலைப்பறவை போன்ற
|