|
கேண்மையுடைய தன்று
என்று கருதும்படி; தடையாக் கேண்மை குன்றும்-தடைபடாத காதற்கேண்மை குறைந்து இவளைப்பிரிந்த;
அ சூளினர் தம்மினும் கொடிது-அந்தச் சூண்மொழி கூறிய தலவரினுங்காட்டில் மிகவும் கொடியதாக
இருக்கின்றது என்க.
(வி-ம்.)
அன்னம் இவள்பால் நடை கற்றும் உடன் பயின்றும் ஓருழி வளர்ந்திருந்தும் என்க. தடையா-தடைபடாத.
சூளினர் எனறது இகழ்ச்சி. இது தலைவனை இயற்பழித்தபடியாம்.
இதனை,
கூடற்றுடியிடை யகத்தினை, அன்புளத்தடக்கி இன்பமுண்ணாரென, இவணடைபெற்றும் இவட் பயின்றிரங்கியும்,
ஓருழி வளர்ந்த நீர இவ்வண்ணம், அன்றெனத் தடையாக்கேண்மை குன்றுமச் சூளினர் தம்மினுங்
கொடிதேயென வினைமுடிவு செய்க, மெய்ப்பாடு-அழுகை. பயன்-தலைவியை ஆற்றுவித்தல்.
|