பக்கம் எண் :

646கல்லாடம்[செய்யுள்92]



கேண்மையுடைய தன்று என்று கருதும்படி; தடையாக் கேண்மை குன்றும்-தடைபடாத காதற்கேண்மை குறைந்து இவளைப்பிரிந்த; அ சூளினர் தம்மினும் கொடிது-அந்தச் சூண்மொழி கூறிய தலவரினுங்காட்டில் மிகவும் கொடியதாக இருக்கின்றது என்க.

     (வி-ம்.) அன்னம் இவள்பால் நடை கற்றும் உடன் பயின்றும் ஓருழி வளர்ந்திருந்தும் என்க. தடையா-தடைபடாத. சூளினர் எனறது இகழ்ச்சி. இது தலைவனை இயற்பழித்தபடியாம்.

     இதனை, கூடற்றுடியிடை யகத்தினை, அன்புளத்தடக்கி இன்பமுண்ணாரென, இவணடைபெற்றும் இவட் பயின்றிரங்கியும், ஓருழி வளர்ந்த நீர இவ்வண்ணம், அன்றெனத் தடையாக்கேண்மை குன்றுமச் சூளினர் தம்மினுங் கொடிதேயென வினைமுடிவு செய்க, மெய்ப்பாடு-அழுகை. பயன்-தலைவியை ஆற்றுவித்தல்.