பக்கம் எண் :

654கல்லாடம்[செய்யுள்



35
  மணிச்சுடர் நறுநெய் கவர்மதிக் கருப்பைக்
கிருவகை யேழெனுந் திருவுல கனைத்துங்
கொடுத்தவன் கூடல் வழுத்தினர் போல
40
  விருபுறம் போற்ற வொருதேர் வரத்தினர்க்
கொன்னலர் முற்றி யொருங்குபு படராப்
பாசறை சென்ற நாணிலங் குழிய
வெண்ணிவிரற் றேய்ந்த செங்கரங் கூப்புக
கொய்தளி ரன்ன மேனி
    மொய்யிழை பூத்த கவின்மலர்க் கொடியே.

(உரை)
கைகோள்: கற்பு. தோழி கூற்று

துறை: பருவங் காட்டி வற்புறுத்தல்.

     (இ-ம்.) இதனை, “பெறற்கரும் பெரும் பொருள்” (தொல். கற்பி. 9) எனவரும் நூற்பாவின்கண் ‘பிற’ என்பதன்கண் அமைத்துக் கொள்க.

30 - 31: கொய்..........................கொடியே

     (இ-ள்) கொய் தளிர் அன்ன மேனி-கொய்த மாந்தளிரைப் போன்ற வாடிய மேனியினிடத்து; மொய் இழை பூத்த கவின் மலர்க் கொடியே-அழகுமிக்க அணிகலன்கள் ஆகிய மலர்கள் மலர்ந்துள்ள அழகிய பூங்கொடி போல்வோய்! கேள், என்க.

     (வி-ம்.) தலைவனது பிரிவாற்றாமையால் திருமேனி ஒளி மழுங்கி இருத்தலின் கொய்தளிர் மேனி என்றார். அணிகலன்களாகிய மலர்களை மலர்ந்துள்ள பூங்கொடி என்க. மொய்யிழை-மிக்க அணிகலன். கவின்-அழகு. மலர்க்கொடி: அன்மொழித் தொகை.

1 - 8: அளிகள்..............................வதிய