|
35
|
|
மணிச்சுடர்
நறுநெய் கவர்மதிக் கருப்பைக்
கிருவகை யேழெனுந் திருவுல கனைத்துங்
கொடுத்தவன் கூடல் வழுத்தினர் போல |
|
40
|
|
விருபுறம்
போற்ற வொருதேர் வரத்தினர்க்
கொன்னலர் முற்றி யொருங்குபு படராப்
பாசறை சென்ற நாணிலங் குழிய
வெண்ணிவிரற் றேய்ந்த செங்கரங் கூப்புக
கொய்தளி ரன்ன மேனி |
| |
|
மொய்யிழை
பூத்த கவின்மலர்க் கொடியே. |
(உரை)
கைகோள்: கற்பு. தோழி கூற்று
துறை: பருவங்
காட்டி வற்புறுத்தல்.
(இ-ம்.) இதனை, பெறற்கரும்
பெரும் பொருள் (தொல். கற்பி. 9) எனவரும் நூற்பாவின்கண் பிற என்பதன்கண் அமைத்துக்
கொள்க.
30
- 31: கொய்..........................கொடியே
(இ-ள்)
கொய் தளிர் அன்ன மேனி-கொய்த மாந்தளிரைப் போன்ற வாடிய மேனியினிடத்து; மொய்
இழை பூத்த கவின் மலர்க் கொடியே-அழகுமிக்க அணிகலன்கள் ஆகிய மலர்கள் மலர்ந்துள்ள
அழகிய பூங்கொடி போல்வோய்! கேள், என்க.
(வி-ம்.)
தலைவனது பிரிவாற்றாமையால் திருமேனி ஒளி மழுங்கி இருத்தலின் கொய்தளிர் மேனி என்றார்.
அணிகலன்களாகிய மலர்களை மலர்ந்துள்ள பூங்கொடி என்க. மொய்யிழை-மிக்க அணிகலன்.
கவின்-அழகு. மலர்க்கொடி: அன்மொழித் தொகை.
1
- 8: அளிகள்..............................வதிய
|