|
20
|
|
முதலிசைச்
செவ்வழி விதிபெறப் பாடியத்
தாதுட றுதைந்தமென் றழைச்சிறைவண்டினம்
பசுந்தாட் புல்லிதழ்க் கருந்தா ளாம்பற் |
|
25
|
|
சிறிதுவா
மதுவமுங் குறைபெற வருந்தியப்
பாசடைக் குலகவர் பயிலாத் தாரியை
மருளொடு குறிக்கும் புனலணி யூர
தானவர்க் குடைந்து வானவரிரப்ப
வுழறேர் பத்தினன் மகபென நாறி |
|
30
|
|
முனிதழற்
சனகன் மிதிலையிற் கொடுமா
மிறுத்தவன் மகட்புணர்ந் தெரிமழு விராமன்
விற்கவர்ந் தன்னை வினையுள்வைத் தேவத்
துணையு மிளவலுந் தொடரக்கான் படர்ந்து |
|
35
|
|
மாக்குக
னதிவிட வூக்கி வனத்துக்
கராதிமா ரீசன் கவந்த னுயிர்மடித்
திருசிறைக் கழுகினற் குலந்த கடன்கழித்
தெறிவளி மகனைநட் டேழு மரத்தினுக்
கரிக்குக் கருங்கடற் கொரோவொரு கணைவிடுத் |
|
40
|
|
தக்கடல்
வயிறடைத் தரக்கனுயிர் வௌவி
யிலங்கையவ் வரக்கற் கிளையோன் பெறுகெனத்
தமதுார் புகுந்து முடிசுமந் தோற்கு
நான்முகத் தவர்க்கு மிருபாற் பகுத்த
வொருநுதற் கண்ணவ னுறைதரு கூடற் |
| |
|
றெளிவேற்
கட்குறுந் தொடியினர் காணி
னின்பா லளியு நீங்கி
யின்புமின் றொழிக்குமெங் காறொடல் சென்மே, |
(உரை)
கைகோள் கற்பு, தலைவி கூற்று
துறை: பள்ளியிடத்துாடல்
(இ-ம்)
இதற்கு "" அவனறிவு ஆற்ற அறியு மாகலின்"" (தொல்கற்பி,6) எனவரும் நுாற்பாவின்கண்
"கொடுமை யொழுக்கம் கோடல் வேண்டி அடிமேல் வீழ்ந்த கிழவனை நெருங்கிக் காதலெங்
கையர் காணி னன்றென மாதர் சான்ற வகையின் கண்ணம் எனவரும் விதி கொள்க,
|