பக்கம் எண் :

மூலமும் உரையும்661



20
  முதலிசைச் செவ்வழி விதிபெறப் பாடியத்
தாதுட றுதைந்தமென் றழைச்சிறைவண்டினம்
பசுந்தாட் புல்லிதழ்க் கருந்தா ளாம்பற்
25
  சிறிதுவா மதுவமுங் குறைபெற வருந்தியப்
பாசடைக் குலகவர் பயிலாத் தாரியை
மருளொடு குறிக்கும் புனலணி யூர
தானவர்க் குடைந்து வானவரிரப்ப
வுழறேர் பத்தினன் மகபென நாறி
30
  முனிதழற் சனகன் மிதிலையிற் கொடுமா
மிறுத்தவன் மகட்புணர்ந் தெரிமழு விராமன்
விற்கவர்ந் தன்னை வினையுள்வைத் தேவத்
துணையு மிளவலுந் தொடரக்கான் படர்ந்து
35
  மாக்குக னதிவிட வூக்கி வனத்துக்
கராதிமா ரீசன் கவந்த னுயிர்மடித்
திருசிறைக் கழுகினற் குலந்த கடன்கழித்
தெறிவளி மகனைநட் டேழு மரத்தினுக்
கரிக்குக் கருங்கடற் கொரோவொரு கணைவிடுத்
40
  தக்கடல் வயிறடைத் தரக்கனுயிர் வௌவி
யிலங்கையவ் வரக்கற் கிளையோன் பெறுகெனத்
தமதுார் புகுந்து முடிசுமந் தோற்கு
நான்முகத் தவர்க்கு மிருபாற் பகுத்த
வொருநுதற் கண்ணவ னுறைதரு கூடற்
    றெளிவேற் கட்குறுந் தொடியினர் காணி
னின்பா லளியு நீங்கி
யின்புமின் றொழிக்குமெங் காறொடல் சென்மே,

(உரை)
கைகோள் கற்பு, தலைவி கூற்று

துறை: பள்ளியிடத்துாடல்

     (இ-ம்) இதற்கு "" அவனறிவு ஆற்ற அறியு மாகலின்"" (தொல்கற்பி,6) எனவரும் நுாற்பாவின்கண் "கொடுமை யொழுக்கம் கோடல் வேண்டி அடிமேல் வீழ்ந்த கிழவனை நெருங்கிக் காதலெங் கையர் காணி னன்றென மாதர் சான்ற வகையின் கண்ணம் எனவரும் விதி கொள்க,