பக்கம் எண் :

மூலமும் உரையும்669



25
  காருட லனுங்கிய பைங்கட் கறையடி
சென்னி தூங்கி நின்றது காட்டு
நெடுமரை யதள்வேய் சில்லிடக் குரம்பையின்
  மற்றதன் றோலி லுற்றிரு வீருங்
கண்படுத் திரவி கீறுமு
னெண்பட நும்பதி யேகுதல் கடனே.

(உரை)
கைகோள்: களவு. கண்டோர் கூற்று.

துறை: நெறிவிலக்கிக் கூறல்

     (இ-ம்.) இதற்கு :பொழுது மாறு முட்குவரத் தோன்றி, வழுவினாகிய குற்றங் காட்டலு, மூரது சார்வ்ய்ஞ் செல்லுந் தேயமு, மார்வ நெஞ்சமொடு செப்பிய கிளவியும்” (தொல். அகத் 40) என்னும் விதிகொள்க.

1 - 2: மின்......................................வேலோய்

     (இ-ள்) மின்பொலி வேலோய்-மின்னல்போல ஒளிருகின்ற வேற்படையை யுடையோய்! என்க.

     (வி-ம்.) மின்-மின்னல். வேலோய் என்றது தலைவனுடைய மறப் பண்பினைச் சிறப்பித்து நின்றது.

12: வனப்பு...................................இடைந்தனள்

     (இ-ள்) இ அணங்கு-இப் பெருமகளோ-; வனப்பு உடை அனிச்சம் புகை மூழ்கியது என-அழகுடைய அனிச்ச மலரானது புகையால் மூடப்பட்டது போல; அ அதர் பேய்த்தேர்க்கு இடைந்தனள்-நீவிர் நடந்து வந்த அப்பாலை வழியில் எழுந்த கானலால் நலியப்பட்டுப் பெரிதும் வருந்தி இருக்கின்றனள் என்க.

     (வி-ம்.) அணங்கு என்றது தலைவியை; உவமையாகுபெயர். அணங்கு-தெய்வப்பெண். அதர்-வழி. பேய்த்தேர்-கானல். இடைதல்-வருந்துதல். கானலால் தாக்குண்டு வருந்தியிருக்கின்றாள் என்பது கருத்து. தோற்றத்தால் தலைவியின் தெய்வத்தன்மையைக் கண்டு இப்பணங்கு என்றார்.

3 - 8: தெந்திசை...........................பலரே.

     (இ-ள்) தெந்திசைக் கோமகன் பகடு பொலிந்து அன்ன-தெற்கின் கண்ணதாகிய உலகிற்கு அரசனாகிய கூற்றுவனுடைய ஊர்தியாகிய எருமைக்கடா பொலிவுற்றிருந்