பக்கம் எண் :

680கல்லாடம்[செய்யுள்98]



35
  கவிரல ரென்னக் கவர்நிர மெட்டுங்
குருவிந் தத்திர் குறித்தன நிறமு
மசோகப் பல்லவ மலரிசெம் பஞ்சு
40
  கோகிலக் கண்ணீ ளிலவலர் செம்பெனத்
தருசௌ கந்தி தன்னிற மாறுஞ்
செங்கல் குராமலர் மஞ்சள் கோவை
குங்கும மஞ்சிற் கோவாங்கு நிறமுந்
திட்டை யேறு சிவந்த விதாய
45
  மொக்கல் புற்றாங் குருதி தொழுதினை
மணிகோ கனகங் கற்பம் பாடி
மாங்கிச கந்தி வளர்காஞ் சுண்டையென்
றாங்கொரு பதின்மூன் றடைந்த குற்றமு
மிவையெனக் கூறிய நிறையருட் கடவுள்
50
  கூடல் கூடாக் குணத்தினர் போல
முன்னைய ளல்லண் முன்னைய ளல்ல
ளமுதவாய்க் கடுவிழிக் குறுந்தொடி நெடுங்குழற்
பெருந்தோட் சிறுநகை முன்னைய ளல்ல
ளுலகியன் மறந்த கதியினர் போல
55
  வைம்புலக் கேளிரு மொருவாய்ப் புக்கன
வதிருவார்க் கொக்கின் களவுயிர் குடித்த
அரிலை நெடுவே லறுமுகக் குளவன்
    றகரங் கமழு நெடுவரைக் காட்சி
யுற்றன ளாதல் வேண்டுஞ்
சிற்றிடைப் பெருந்தோட் டேமொழி தானே.

(உரை)
கைகோள்: களவு. செவிலி கூற்று

துறை: மெலிவு கண்டு செவிலி கூறல்.

     (இ-ம்.) “களவலர் ஆயினும் காமமெய்ப் படுப்பினும், அளவு மிகத் தோன்றினும் தலைப்பெய்து காணினும்” எனவரும் (தொல்-களவி- 24) நூற்பாவின்கண் “தலைப்பெய்து காணினும்” என வரும் விதி கொள்க.