|
|
|
தெம்மெதிர்ப்
பின்றி யிருந்தெதிர்ப் பட்டு
மறைவழி யொழுகா மன்னவன் வாழும் |
|
35
|
|
பழிநாட் டார்ந்த பாவம் போலச்
சேர மறைந்த கூரிரு ணடுநா
ளரிதிற் போந்தனி ரென்றொர்
பெரிதின் வாய்மை வெற்பனிற் பெறினே. |
(உரை)
கைகோள்: களவு. தலைவிகூற்று
துறை: செலவு
நினைந்துரைத்தல்.
(இ-ள்) இதற்கு உயிரினும்
சிறந்தன்று நாணே..............தோன்றுமன் பொருளே என்னும் நூற்பாவின்கண் (தொல்.
களவி-22) தாவினன்மொழி கிழவி கிளப்பினும் என்னும் விதிகொள்க.
1-5:
உயிர்.............................புகுந்து
(இ-ள்) உயிர் புகும்
சட்டகம் உழிதொறும் உழிதொறும்-உயிர் பொருந்துதற் கிடமாகிய உடம்பிடந்தொறும்
உடம்பிடந்தொறும்; பாடகம் போல பழவினை புகுந்த- இடைவிடாது காலைப் பாடகம் சூழ்ந்து
கிடந்தாற்போலச் சூழ்ந்து கிடந்த பழவினை கொல்லும் விருப்பங் கொண்டு தொடர்ந்து
உட்புகுந்தாற்போல; முதிர் புயல் குளிரும் எழுமலைபுக்க-சூன் முதிர்ந்த முகில் முழங்கா
நின்ற ஏழு மலையினும் புகுதற்குக் காரணமாய; கட்டு உடைச் சூர் உடல்-கட்டினையுடைய சூரபன்மா
உயிரினைப் பருகும் காமம் கொண்டு பற்றி உள்புகுந்து-விருப்பங் கொண்டு அவனைத் தொடர்ந்து
சென்று கடலினுட் புகுந்து என்க.
(வி-ம்.)
சட்டகம்-உடம்பு உழிதொறும் உழிதொறும்- இடந்தொறும் இடந்தொறும். பாடகம்-மாதர்
காலணியில் ஒன்று. இது பழவினைக்கு உவமம். பாடகம் போலச் சூழ்ந்த பழவினை என்றார்
சிந்தாமணியினும். காமம் கொண்டு புகுந்த என உவமைக்கு ஒட்டுக. பாடகம் பழவினைக்கும்
பழவினை புகுதல் வேல்புகுதற்கும் உவமைகள் ஆதலின் அடுக்கிய தோற்றம் அன்மை உணர்க.
எழுமலை-ஏழுமலை.
பழவினை
புகுதற்குக் காரணமாகிய இடத்தினையுடைய நெஞ்சம் புகுந்தாற்போல எனினுமாம். எழுவகைப்
பிறப்பில் பலவகை உடம்பினையும் கூறுவார் உழிதொறும் உழிதொறும் என்றார். கட்டு-கற்பித்தல்.
அஃதாவது முருகன் எனக்குப் பகையாய் வருக என்று கற்பித்தல் என்க. குதிரை முகமும் மக்கள்
வடிவுமாகக் கற்பித்தலுடைய சூரன் எனினுமாம். உடல்-ஆகுபெயர்: உயிர் என்க. அவன் சென்ற
கடலினுட் புகுந்து என்க. கல்.-6
|