|
|
|
நவமணி
யெடுத்து நற்புலங் காட்டலின் |
|
15
|
|
வளர்குறி
மயங்கா வணிக னாகியும்
விழைதரு முழவும் வித்து நாறுந்
தழைதலின் வேளாண் டவலை னாகியும்
விரிதிரை வையைத் திருநதி சூழ்ந்த
மதுரையம் பதிநிறை மைம்மலர்க் களத்த |
|
20
|
|
னிணையடி
வழுத்தா ரணைதொழி லென்னக்
கைதையெங் கரைசெய் பொய்தற் பாவையோ
டிருந்திரை யெடுக்கப் பொருதிரை யெடுத்தும்
பூழிப் போனகம் புதுவுட ணுண்டுஞ்
சாய்தாட் பிள்ளை தந்து கொடுத்து |
|
25
|
|
முடவுடற்
கைதை மடன்முறித் திட்டும்
கவைதுகிர்ப் பாவை கண்ணி சூட்ட
குவலயத் திருமலர் கொணர்ந்து கொடுத்து
நின்றா னுண்டொரு காளை
யென்றா லித்தொழில் செய்வது புகழே. |
(உரை)
கைகோள்: களவு. தலைவி கூற்று.
துறை: அரத்தொடுநிற்றல்
(இ-ள்) இதற்கு வரைவிடை
வைத்த எனவரும் (தொல். கல. 21) நூற்பாவின்காண் உரையெனத் தோழிக்குரைத்தற்கண்ணும்
தானே கூறுங் காலமுளவே என்னும் விதிகொள்க.
1-2:
தன்னுழை................................ஆகியும்
(இ-ள்) தன் உழை
பலஉயிர் தனித்தனி படைத்து-தன்னிடத்தே பலவேறு உயிர்னங்களையும் தனித்தனியே படைத்து;
பரப்பிக்காட்டலில் பதுமன் ஆகியும்-தன் பரப்பெல்லாம் பரவச்செய்து காட்டுதலால்
படைப்புக்கடவுளாகிய மலரோனை ஒத்தும் என்க.
(வி-ம்.)
இதுமுதல் 18 ஆம் அடிவரையில் வையை நதியின் வருணனை. அந்நதி தனக்குள்ளே மீன்முதலிய
நீர்வாழ்வனவாகிய உயிர்களைப் படைத்து யாண்டும் பரப்புதலால் மலரோனை ஒத்துளது என்க.
பதுமன்-தாமரைமலரில் உறையும் பிரமன், இனி உலகிலுள்ள ஏனைய உயிர்களையும் நீரே உண்டாக்குதலின்
பதுமனாகியும் என்னும் உவமை நன்கு பொருந்துதல் உணர்க.
|