பக்கம் எண் :

90கல்லாடம்[செய்யுள்9]



3-4: அவ்வுயிர்........................................செல்வனாகியும்

     (இ-ள்) அவ்வுயிர் எவ்வுயிர் அனைத்தும் காத்தலின்-தன்னுட் டோன்றிய நீர்வாழ்வனவாகிய அவ்வுயிர்களோடு நிலப்பகுதியில் தோன்றிய ஓரறிவுயிர் முதல் எல்லா உயிர்களையும் உணவு முதலியவற்றால் பாதுகாத்தலாலே: செவ்விகொள் கருமுகில் செல்வனாகியும்-அம்மலரோன் படைக்கும் உயிர்களனைத்தையும் பாதுகாக்கும் கார்ப் பருவத்துக் கரிய முகிலை ஒத்த செல்வனாகிய திருமாலை ஒத்தும் என்க.

     (வி-ம்.) அவ்வுயிர் என்றது நீர்வாழ்வனவற்றை. எவ்வுயிர் என்றது ஏனைய உயிர்களை. அவை ஓரறிவுயிர் முதலியன. அவ்வுயிரும் ஏனைய எவ்வுயிரும் ஆகிய அனைத்தும் என்க. கருமுகிற் செல்வன்-திருமால். செவ்வி-பருவம்.

5-6: கட்டிய....................................ஆகியும்

     (இ-ள்) கட்டிய கரை வரம்பு உட்புக அழித்து-தான் வரம் பிகந்து ஓடாமல் கட்டப்பட்ட கரையாகிய எல்லை தன்னுள் மூழ்கி விடும்படி அழித்து; நீர் தலைதரித்தலின் நிமலன் ஆகியும் நீரைத் தலையின்மேற் சுமத்தலால் மலரோனும் திருமாலும் படைப்பும் காப்பும் என வைத்த கரையின் எல்லை தன்னுள்ளே ஒடுங்கும்படி அழித்துக் கங்கையைத் தலையிற் சுமந்த சிவபெருமானை ஒத்தும் என்க.

     (வி-ம்.) வரம்பு-கரை. நீர் என்புழி வையைக்கு நீரும் சிவபெருமானுக்குக் கங்கை நீரும் என்க. நிமலன்-அழுக்கற்றவன்; என்றது சிவபெருமானை.

7-8: தருவும்.........................................ஆகியும்

     (இ-ள்) தருவும் மணியும் சங்கமும் கிடைத்தலின்-சோலைகளையும் மணிகளையும் பெற்றிருத்தலினாலே; அரிமுதிர் அமரர்க்கு அரசன் ஆகியும்-கண்கள் மிகுந்த தேவர் கோமானாகிய இந்திரனை ஒத்தும் என்க.

     (வி-ம்.) தரு என்புழி வையைக்குச் சோலை என்க. இந்திரனுக்குக் கற்பகத் தருக்கள் என்க. மணி யாற்றிற்கு முத்து முதலியனவும் இந்திரனுக்குச் சிந்தாமணியும் கொள்க. சங்கம்-இந்திரனுக்கு சங்கநிதி என்க. அரி-கண். முதிர்தல் ஈண்டு மிகுதி குறித்து நின்றது. ஆயிரங்கண்கள் உடைமைய்ன் அங்ஙனம் கூறினர்.

9-10: மூன்று.........................ஆகியும்

     (இ-ள்) மூன்று அழல் நால் மறை முனிவர் தோய்ந்து-மூன்று வகைப்பட்ட தீயினையும் நான்கு மரைகளையும் உடைய முனிவர்கள் மூழ்கும்படி; மரைநீர் உகுத்தலின்-மறைத்தல்