|
|
|
வீதிவந்
ததுவர லானம்
மேதந் தீர விருமருங் கெழுந்தே. |
(உரை)
கைகோள், கற்பு, பரத்தையர்க்குப் பாங்காயினார் கூற்று
துறை: தேர்வரவு
கண்டு மகிழ்ந்து கூறல்
(இ-ள்) இதனைப் புல்லுதல்
மயக்கும் (தொல். கள. 24) என்னும் நூற்பாவின்கண் பிறவும் என்பதனால் அமைத்துக்
கொள்க.
14-16:
வெண்சுடர்.......................................பெருமான்
(இ-ள்) வெண்சுடர்
செஞ்சுடர் ஆகிய விண்ணொடு-திங்களும் ஞாயிறும் அச்சுடர்கள் தோன்றுதற் கிடனான வெளியும்;
புவி புனல் அனல் கால்மதிபுலவோன் என-நிலமும் நீரும் காற்றும் மதிக்கும் உயிரும் என்று
கூறும்படி; முழுதும் கண் நிறைந்த முக்கண் பெருமான்-யாண்டும் நிறைந்த மூன்று கண்களையுடைய
சிவபெருமான் என்க.
(வி-ம்.) வெண்சுடர்-திங்கள்.
செஞ்சுடர்-ஞாயிறு. வெண்சுடரும் இவை உண்டாக்கிய விண்ணும் என்க. ஒடு எண்ணின்கண் வந்தது.
கால்-காற்று. மதிப்புலவோன்-மதிக்கும் அறிவினையுடைய உயிர் என்க. இவற்றை இறைவனுடைய
எண் வகை வடிவங்கள் என்ப. இதனை,
நிலநீர் நெருப்புயிர்
நீள்விசும்பு நிலாப்பகலோன்
புலவனாயமைந்தனோ டெண்வகையாய்ப் புணர்ந்துநின்றான்
உலகே ழெனத்திசை பத்தெனத்தான் ஒருவனுமே
பலவாகி நின்றவா தோணோக்கம் ஆடாமோ (திருத்தோ. 2) |
எனவரும் திருவாசகத்தானும்
உணர்க. இவ்வெண்வகைப் பொருள்களுள் உயிர் தனிச்சிறப்புடையது என்பது தோன்ற மதிபுலவோன்
என்று வியந்தார். மதிபுலவோன்: வினைத்தொகை.
17-18:
பனி................................அந்நாள்
(இ-ள்) பனிக்கதிர்
குலவன் பயந்து அருள் பாவையை-திங்கட் குலத்தோனாகிய மலையத்துவச பாண்டியன் ஈன்றருளிய
கொல்லிப் பாவையை ஒத்த தடாதகைப் பிராட்டியாரை; திருபெருவதுவை பொருந்திய அந்நாள்-அழகிய
பெரிய மணச்சடங்கு வாயிலாகப் பொருந்திய அந்த நாளிலே என்க.
(வி-ம்.) பனிக்கதிர்:
அன்மொழித் தொகை. குளிர்ந்த கதிர்களையுடைய திங்கள் என்க. புலத்தையுடையவனைப்
புலவன் என்றாற் போலக் குலத்தையுடையவனைக் குலவன் என்றார்; என்றது மலயத்து
|