பக்கம் எண் :

உண்மை விளக்கம்647


நடனத்தை, - புதல்வா நவிலக் கேள் - மாணவகனே சொல்லக்கேள், -
சிட்டன் - பரமசிவன், - சிவாயநம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயம்
அற நின்று ஆடுவான் - சிகாரமாதி பஞ்சாக்கரமே திருமேனியாகக் கொண்டு
ஆன்மாக்கள் பிறவியறத்தக்கதாக நிருத்தஞ் செய்வன். [எட்டும் இரண்டும் -
அகரம் உகரம்.]                                               31

ஆடும் படிகேள்நல் லம்பலத்தான் ஐயனே
நாடுந் திருவடியி லேநகரம் - கூடும்
மகரம் உதரம் வளர்தோள் சிகரம்
பகருமுகம் வாமுடியப் பார்.         32

     (உரை) ஐயனே நல் அம்பலத்தான் ஆடும் படி கேள் - மாணாக்கனே
பொன்னம்பலமுடையான் நிருத்தஞ்செய்கிற முறைமையைச் சொல்லுகிறோங்
கேள், - நாடுந் திருவடியிலே நகரம் - நாடாநின்ற ஸ்ரீ பாதத்திலே
நகார மாகவும், - கூடும் உதரம் மகரம் - பொருந்தப்பட்ட திருவுந்தியிலே
மகாரமாகவும், - வளர் தோள் சிகரம் - வளராநின்ற திருத்தோளிலே
சிகாரமாகவும், - பகருமுகம் வா - சொல்லப்பட்ட திருமுகத்திலே
வகாரமாகவும், - முடிய பார் - திருமுடியிலே யகாரமாகவும் கொண்டருளித்
திருநிருத்தஞ் செய்வானென்று விசாரித்தறிவாயாக.                  32

சேர்க்கும் துடிசிகரஞ் சிக்கனவா வீசுகரம்
ஆர்க்கும் யகரம் அபயகரம் - பார்க்கிலிறைக்(கு)
அங்கி நகரம் அடிக்கீழ் முயலகனார்
தங்கும் மகரமது தான்.                  33

     (உரை) ஆர்க்குந் துடி சேர்க்குங் (கரம்) சிகரம் - ஒலிக்கின்ற
டமருகமேந்திய ஸ்ரீ அத்தத்திலே சிகாரமாகவும், - சிக்கன வீசு கரம் வா -
நன்றாக வீசிய ஸ்ரீ அத்தத்திலே வகாரமாகவும், - அபயகரம் யகரம் -
அமைத்த ஸ்ரீ அத்தத்திலே யகாரமாகவும், - பார்க்கில் அங்கி இறைக்கு
நகரம் - பார்க்குமிடத்து அக்கினியேந்திய ஸ்ரீ அத்தத்திலே நகாரமாகவும்,
- முயலகனார் தங்கும் அடிக்கீழ் மகரமதுதான் - முயலகனை மிதித்த ஸ்ரீ
பாதத்திலே மகாரமாகவும் கொண்டருளித் திருநிருத்தஞ் செய்வானென்றறி
வாயாக.                                                    33