பக்கம் எண் :

சீரங்கநாயகியாரூசல்905

15.மேவியபங்கயன்றவஞ்செய்திறைஞ்சுங்கோயில்
        வேணியரன்புராணநூல்விளம்புங்கோயில்
தாவுதிரைக்காவேரிபுடைசூழ்கோயில்
        சந்திரவாவியின்மருங்குதழைத்தகோயில்
பாவளர்சத்தாவரணமுடையகோயில்
        பணியணிசேரோங்காரமானக்கோயில்
தேவர்தொழுந்திருவரங்கம்பெரியகோயில்
        சீரங்கநாயகியாராடிரூசல்.
தாரங்கத்திருவரங்கர்க்கூசல்பாடிச்
        சாத்தினான்பேரனெனுந்தன்மையாலு
மாருங்கண்டேதெளியுமவன்சொல்பாட்டி
        னதிசயத்தையறிவனென்னுமாசையாலும்
பாரெங்கும்புகழ்வேதவியாசபட்டர்
        பதம்பணிகோனேரியப்பன்புன்சொல்லாகச்
சீரங்கநாயகியார்க்கொருபத்தைந்து
        திருவூசற்றிருநாமஞ்செப்பினானே.