ஒரு தேதி அவன் கதவைத் திறந்துகொண்டு படிக்கட்டில் உட்கார வந்ததுமே ஒரு பழுப்பு நிறப் பூனைக்குட்டி விருட்டென்று பாய்ந்தோடியது. சற்று நேரத்திற்கு முன்தான் மழை பெய்து ஓய்ந்திருந்தது. சுற்றிலும் ஈரம். புற்களும் சின்னஞ்சிறுசெடிகளும் ஆங்காங்கே மழையில் நனைந்து பளிச்சென்றிருந்தன. சாலையின் இரண்டு புறங்களிலும் எதிரெதிராய் இரண்டு தெரு நாய்கள் ஒன்றையொன்று கடந்தன. மாலை மணி ஐந்திற்கேமணி ஆறுபோல் ஒளி மங்கியிருந்தது. வானத்தின் நீலம் முற்றிலும் மறைந்து கொஞ்சம் கொஞ்சம் இடைவெளி விட்டு மேகங்கள் திரண்டிருந்தன. அந்த இடைவெளியில் வெள்ளைநிற மேகங்கள் முன்முகம் காட்டிக்கொண்டிருந்தன. திடீரென்று பூனைக்குட்டி பக்கத்தில்வந்து அதனுடைய ஓசையை எழுப்பத் துவங்கிற்று. எட்டிப் பார்த்தான். உருண்டைக் கண்கள் இரண்டையும் விழித்தபடி அவனைப்பார்த்துக் கத்திக்கொண்டிருந்தது. அதனுடைய இடத்திற்குத்தான் வந்து தொல்லை கொடுத்துவிட்டோமோ என்று எண்ணினான். சிறிது நேரத்தில்பூனைக்குட்டி ஓடிப்போய்த் தூரத்திலிருந்து கத்திக் கொண்டிருந்தது. அவன் உட்கார்ந்திருந்த இடத்திற்குப் பின்னால் சிறிய கறுப்பு எறும்புகள் சென்றுகொண்டிருந்தன. படிக்கட்டுகளில் இரண்டிரண்டு கோடுகளாய்க் கோலமாவில் போடப்பட்டிருந்தது. எறும்புகள் அவற்றையெல்லாம் கடந்து சென்றுகொண்டிருந்தன. இதைச் சொல்லிக்கொண்டிருக்கும்போதே தான் வேறு யாரோவாகச் செயல்பட்டுச் சிந்தித்துக்கொண்டிருந்தான். தான் நினைத்துக் கொண்டிருப்பதையெல்லாம் பக்கத்தில் இருந்த தென்னை மரம் கேட்டுக்கொண்டிருக்குமோ என்று தோன்றிற்று. அப்பொழுது மின்னல் ஒன்று கிழக்குப்புற வானில் பளிச்சிட்டது. திடீரென்று நான்கு சிறு பறவைகள் இரண்டு காகங்களுடன் அணிவகுத்துச் சென்றன. அவன் குறித்து வைத்திருந்த நாளில் அப்படிஒன்றும் பெரிதாக நடக்கப்போவதில்லையோ என்று தோன்றிற்று. ஒரு கணம், நடந்தால் என்னவெல்லாம் ஆகும் என்று மனக்கணக்கு போட ஆரம்பித்தான். உறக்கத்திலிருந்து அவன் விடுபடுகிறான். நிச்சயம் சில மாறுதல்கள் நிகழக்கூடும். மதிப்புடன் போற்றிப் பாதுகாத்தவை எல்லாம் ஒரு கணத்தில் அர்த்தம் இழந்து புதியதோர் தளத்தில் இயங்கத் தொடங்கும். அவன் அனுபவத்தில் உலகம் புதியதோர் பொருள் கொள்ளும். அவன் நினைவுகள் எல்லாம் கடந்த காலத்தில் மட்டுமே சஞ்சரித்துக் |