பக்கம் எண் :

ஆத்மாநாம் படைப்புகள்73

மௌனம்

ஒரு புதிய அலை
எனக்குள் எழுந்தது
நான் பேசும்
ஒவ்வொரு எழுத்துடனும்
அதன் உறுதியைக் கோர்த்தது

சொற்கள்
அதன் ஆழத்தை நோக்கிப்
பாய்ந்துகொண்டிருந்தது
வாக்கியங்கள்
ஓசையுடன் ரீங்கரித்தன

பொருள் உருவாக்கம் கொண்டது
கேள்விகள் கேட்கப்படாமலேயே
பதில்கள் வெளியாயின
மௌனம் ஆன் ஏன்