பக்கம் எண் :

100

திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி

    படத்தின் புள்ளிகளையுடைய ஒளிபொருந்திய பாம்பினை(ச் சடாமுடியில்) தரித்த பால்வண்ணப் பெருமானே!  (யான்) நரகில் விழுந்து வருந்தினாலும் உன்னிடத்தே (இடையறாத) பக்திசெய்திருத்தலை வேண்டுவதே யல்லாமல், (அந்தப் பக்தி எய்தாதாயின், நரகத் துன்பத்தினின்று விடுபெறுதலை ஒரு பொருட்டாகக் கருதி) வீடு பேற்றையும் விரும்பிலன் ; (போக நுகர்ச்சிக்கிடமான) சுவர்க்கப் பேற்றையும் விரும்பிலன் ; முனிவர்களால் எய்தப்படும் (அணிமா முதலிய எண்வகைச்) சித்திப்பேற்றையும் விரும்பிலன் ; திக்குப்பாலகர்(களுள் இர்திரகுபேரர்)க்குரிய சிறப்புக்களையும் விரும்பிலன்.

    உத்தி-பாம்பின் படத்தில் உள்ள புள்ளிகள் ; ‘உத்தியுந்துத்தியும் உரகப் படப்பொறி’ என்பது பிங்கலம். வாள்-ஒளி.  ‘வசியும் ஒளியும் வாளென லாகும்’ என்பதும் அது.  ‘வாள் ஒளியாகும்’ என்பது தொல்காப்பியம்.  அரா-பாம்பு; ஈண்டு இயல்பாய் நின்ற இவ்வாகாரவீற்றுப்பெயர் குளியதன்கீழ் நின்ற ஆக் குறுகி உகரம் ஏற்று ‘அரவு’ எனவும் வரும்.  உனது, ஏழாம் வேற்றுமை நிற்குமிடத்து ஆறாம் வேற்றுமை உருபு வந்த உருபுமயக்கம்; நான்காம் வேற்றுமை உரிய தெனலு முண்டு; விஷயமாக உடைமை வேற்றுமைப் பொருளாகிய சம்பந்தம் எனலுமொன்று.  ‘நரகிடைப்படினும்’ என்பதில் உம்மை எதிர்மறைப் பொருளது.  முத்தி, சித்தி, சிறப்பு என்பவற்றில் உயர்வு சிறப்பும்மை தொக்கன.  முத்தி-இருவினை யொழித்துப் பிறப்பறுத்துச் சார்தற்கிடனான சிவநிலை : துறக்கம்-நல்வினைப் பயன் நுகர்தற்கு இடனான சுவர்க்கபூமி : இவற்றின் வேறுபா டுணர்க.  எண்வகைச் சித்தியாவன :  ‘அணிமா மகிமா கரிமா இலகிமா-பிராத்தி பிராகாமியம் ஈசத்துவம் மசித்துவம்என்-றோதற்கரிய அட்டமா சித்தி ’ இதனான் உணர்க.  திசாதிபர் எண்மர் ; அவ