த
108 |
திருக்கருவைப்
பதிற்றுப்பத்தந்தாதி |
இடபவாகனத்தின்மீது
ஆரோகணித்துத் திருக்கருவையென்னும் சிறந்த நகரத்தின் வீதியின்கண்ணே எழுந்தருளிவரும் குற்றமற்றவனே
! வணக்கம்.
கடையுகம்-யுகக்கடை;
இலக்கணப்போலி. பொழில்-பூமி; ‘புவியும் சோலை யும் பெருமையும் பொழிலே’ என்பது பிங்கலம்.
‘ஏழையும்’ என முற்றும்மை கொடுத்தார் ‘இனைத்தென்றறி பொருள்’ ஆதலின். கொளுத்துதல்-பற்றுவித்தல்;
‘அறிவு கொளுத்தினான்’ ‘கூரை கொளுத்தினான்’ என வருதல் காண்க. கொளுத்திய சுடலை-எரித்த
காரணத்தால் உண்டான காரியமாகிய சுடலை எனப் பொருள்படுதலின் ‘கொளுத்திய’ என்பது காரணப்
பொருட்டாய் நின்ற இறந்த காலப் பெயரெச்சமாம். ‘கொளுத்திய சுடலை’ எனப் பாடங்கொள்வாருமுளர்;
‘எரித்து அந்தச் சுடலை’ எனப் பொருள் கொள்வர். அடலை-சாம்பல். ‘அடலை வெண்பலி சாம்பலாகும்’
என்பது பிங்கலம். மேவியே-ஏ, இசைநிறை.
சர்வசங்காரகாலத்தில்
சிவபெருமான்கொள்ளும் திருவுருவம் அனற்பிழம்பாத லால் ‘ கனல் கொளுத்திய ’ என்றார். உலகம்
ஏழையும் என்பதை மேல் உலகம் ஏழையும் கீழ் உலகம் ஏழையும் எனக் கொள்க. அம்பலமாவது பொது
இடம். போற்றி போற்றி என்பது உவகைபற்றிவந்த அடுக்கு. யாவுமழிந்த சங்காரகாலத்தில்
இறைவன் திருநடத்தைக் காண்பார் உமாதேவியேயாதலால் ‘ அம்மைகாண ’ என்றார்.
(93)
94.
விமல !
போற்றி. நின் பெருமை நாரணன்
விரிஞ்சன்
ஆதியோர் அறிய கிற்றிலா
அமல ! போற்றிநான்
அறியும் வண்ணம்முன்
அறிவு தந்தருள் அறிவ
! போற்றி. தண்
கமல வாவிசூழ் கருவை மாநகர்க்
களவின் நீழல்வாழ்
கால காலனே !
இமய மால்வரைக் குமரி
ஒப்பனைக் (கு)
இனிய காதல !
போற்றி. எந்தையே !
|